Sunday, December 29, 2019

மோடி மூஞ்சியை வரையலாமா எடப்பாடி?





தமிழகம் இது வரை காணாத கேவலமான ஆட்சியாக எடப்பாடி ஆட்சி மாறியுள்ளது.

கேடு கெட்ட மோடி ஆட்சியின் பினாமி ஆட்சியாக நடக்கும் இந்த அடிமை ஆட்சியில் 

குடியுரிமை மசோதாவிற்கான எதிர்ப்பை "கோலம்" போட்டு பதிவு செய்த காரணத்தால் எட்டு பெண்களை கைது செய்துள்ளது தமிழக ஏவல் துறை.

இந்த கொடுமை இன்று காலை சென்னை பெஸண்ட் நகரில் நடந்துள்ளது.

மிஸ்டர் எடப்பாடி, இன்னும் என்ன கொடுமையெல்லாம் செய்யப் போறீங்க? தவழ்ந்து வந்து சசிகலா காலில் விழுந்து முதலமைச்சரான உமக்கெல்லாம் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல் இருக்கலாம். யார் காலிலாவது விழுந்து கிடக்கிற மானம் கெட்ட பிழைப்பு உம்முடையதாக இருக்கலாம். அதனால் உம்மைப் போல அனைத்து தமிழ்நாட்டு மக்களையும் நினைக்க வேண்டாம்.

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக கோலம் போட்டால் கைது செய்யும் எடப்பாடியே, மோடியின் மூஞ்சியை கோலமாகப் போடலாமா? அப்படி செய்தால் உம்முடைய மனசும் உம் எஜமானன் மனசும் குளிர்ந்து போகுமா?


1 comment:

  1. Modi moonjai kolamaa pottu, aeri aeri mithikalaam.

    ReplyDelete