Thursday, December 26, 2019

அருகதையற்ற தளபதி



மேலே உள்ள படம் கர்ணன் திரைப்படத்தில் வரும் உணர்ச்சிமயமான காட்சி. 

கௌரவர்களின் தளபதியாக நியமிக்கப்பட்ட பீஷ்மரால் இழிவுபடுத்தப் படும் கர்ணன் கொதித்தெழுந்து

"நீர் தளபதி பதவிக்கு அருகதையற்றவர்" 

என்று சாடும் காட்சி அது.

வரலாறு திரும்புகிறது.

இன்னும் ஐந்து நாட்களில் ஓய்வு பெறப்போகும் நிலையில் தன் பொறுப்பை மறந்து குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை விமர்சித்துள்ள ராணுவத்தளபதி பிபின் ராவத்தைப் பார்த்து நாமும் உரக்கச் சொல்லிட வேண்டும்.

"நீர் தளபதி பதவிக்கு அருகதையற்றவர்" 

முறைகேடாய் பதவிக்கு வந்த மனிதனின் சிந்தனையும் செயலும் மட்டும் என்ன முறையாகவா இருக்கும்!

No comments:

Post a Comment