Wednesday, December 4, 2019

டாஸ்மாக் முதலாளியின் வெறியாட்டம்













" வன்முறையற்ற தமிழகம், போதையற்ற தமிழகம்" என்ற முழக்கத்தை டாஸ்மாக் முதலாளியான தமிழக அரசால் ஏற்க முடியவில்லை.

பாலியல் குற்றவாளிகளுக்கு பொள்ளாச்சி உட்பட பல ஊர்களில் பாதுகாப்பு கொடுக்கிற கேவலத்தையும் இவர்கள்தான் செய்து வருகிறார்கள்.

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினத்திற்கு இலக்கு வைத்து சாராய விற்பனை செய்கிற அரசாங்கத்தால் மது விலக்கு என்ற வார்த்தையை சகித்துக் கொள்ள முடியவில்லை. 

அதனால்தான் வடலூரிலிருந்தும் திருவண்ணாமலையிலிருந்தும் இரண்டு முனைகளில் நடைப்பயணம் மேற்கொண்டு வந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தோழர்களை சென்னை மாநகரத்திற்குள் அனுமதிக்க மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்துள்ளது. 

வன்முறைக் கலவரத்தை நோக்கமாகக் கொண்ட காவிக் கயவர்களின் அனைத்து இயக்கங்களும் வாய் பொத்தி அனுமதி கொடுக்கிற எடுபிடி அரசின் ஏவல் துறைக்கு நியாயமான, மக்கள் நலன் சார்ந்த இயக்கங்கள் மட்டும் எட்டிக்காயாய் கசக்கிறது.

தீண்டாமைச்சுவர் எழுப்பி ஆணவக் கொலை செய்த துணிக்கடை முதலாளியை கைது செய்ய அவ்வளவு தடுமாறினார்கள்.

ஹைகோர்ட்டை அசிங்கப்படுத்திய ஹெச்.ராஜாவையும்
ஜாமீன் மறுக்கப்பட்ட எஸ்.வி.சேகரையும்

நெருங்கக் கூட இவர்களால் முடியவில்லை.

போராட்டத்தை ஒடுக்க மட்டும் வீரம் வந்து விடுகிறது இந்த காட்டுமிராண்டிகளுக்கு.

காலம் நிச்சயம் இதற்கு பதிலடி கொடுக்கும் . . .




4 comments:

  1. காலம் நிச்சயம் இதற்கு பதிலடி கொடுக்கும் . . .//

    குடுத்தா நல்லா இருக்கும்.

    ReplyDelete
  2. Govt.never hides it's face.whenever the opportunity comes it shows it's cruel face.it is all the middle class should change their opinion and e

    ReplyDelete
  3. Educate the people below poverty line about the attitude of govts.

    ReplyDelete
  4. காலம் என்றைக்கு கொடுக்கும்...

    ReplyDelete