Wednesday, November 1, 2017

வெள்ள உதவி - ரொம்ப பழசு - "முடியல"



நேற்று காலை எட்டு மணி அளவில்  முதன் முதலில் இந்த செய்தி (நீல நிறத்தில் இருப்பது) வாட்ஸப்பில் ஒரு குழுவில் வந்தது. அதற்கு அடுத்த படியாக "இந்த செய்தி இரண்டு வருடங்களுக்கு முந்தையது" என்றும் இன்னொரு செய்தி வந்தது.

அப்போது  தொடங்கி சில நிமிடங்கள் முன்பு வரை அந்த முதல் செய்தி ஒரு ஐம்பது முறையாவது வந்திருக்கும். "இது இரண்டு வருடத்துக்கு முந்தைய செய்தி" என்று பதிலளித்துக் கொண்டே இருந்தேன். 

"முடியல" என்று வடிவேலு பாணியில் புலம்பும் அளவிற்கு நம் மக்கள் வந்ததை பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் பாராட்டுக்குரியது. ஆனால் வந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு பகிர்வது நல்லது. 

ஆர்வம் நல்லது. 
அது ஆர்வக்கோளாறாக வேண்டாம்.





1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திற‌ந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.

SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .

2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.
இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food 
Contact Mr.Jogani 9840042152

3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
மேலும் தகவல் அறிய 044 23621494.

டி.எஸ்.ஆர்.சுபாஷ்.

4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள 
வேண்டுகிறேன்.

5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது. 
தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)

food pkts are ready for distribution

Pls contact 
vineet Jain 9840426263 
Gaurav Jain 9841062626

6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline

அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.

7.   75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207

8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077

9.  பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233

10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008

#இந்த பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.

1 comment:

  1. இந்த மாதிரியான தகவல்களை பரப்ப முகநூலும், whatsapp உம் சிறந்த வழி
    ப்லோக் இப்போ பெரும்பாலும் படிப்பதில்லை . உங்கள் முகநூல் கணக்கில் பதிந்து பகிருங்கள்

    ReplyDelete