Wednesday, November 29, 2017

எடுபிடி அரசின் கழிவறை அடக்குமுறை





இது வரை எந்த அரசும் இவ்வளவு கேவலமாக தரம் தாழ்ந்து கீழிறங்கி நடந்தது கிடையாது என்ற சாதனையை படைத்துள்ளது எடுபிடி அரசு.

முறையான பணி நியமனம் பெற்றும் வெறும் ஏழாயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்குவதை மாற்றி கால வரன் ஊதியம் வழங்க வேண்டும் என்று செவிலியர்கள் சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நான்கு நாட்களாக முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயலாத தமிழக அரசு அவர்கள் போராட்டத்தை ஒடுக்க முயல்கிறது.

கைது நடவடிக்கை, காவல்துறை தடியடி போன்றவைகளுக்கு மாறாக புதிய அடக்குமுறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது எடுபிடி எடப்பாடி அரசு.

அந்த வளாகத்தில் உள்ள அனைத்து கழிவறைகளையும் பூட்டி வைத்து விட்டது. பெண்கள் தங்கள் உடல் உபாதைகளுக்கு அஞ்சி முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என்று ஒரு இழிவான யோசனையைச் சொன்ன அந்த வக்கிர சிந்தனையாளன் யாரோ?

கழிவறையைப் பூட்டிய காரணத்தால் அவர்களே செலவு செய்து மொபைல் டாய்லெட் வேன் வரவைத்தாலும் அதனை உள்ளே வருவதற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை.

பெண் ஊழியர்களை ஒரு அரசால் இப்படிக்கூட நடத்த முடியும் என்று நினைத்துப் பார்க்கவே கோபமாக இருக்கிறது.

செவிலியர்கள் போராட்டம் இப்போது ஜனநாயக  இயக்கங்களின் போராட்டமாக கழிவறை அடக்குமுறையால் மாறி இருக்கிறது.

உணர்வுள்ள ஒவ்வொருவரும் இந்த அடக்குமுறையை எதிர்க்க வேண்டும். 

No comments:

Post a Comment