Thursday, June 30, 2016

ஸ்வாதி படுகொலையை கண்டித்து - ஒரு தகவலுக்காக

இன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை. - உங்கள் தகவலுக்காக

 



காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்
வேலூர் கோட்டம், பதிவு எண் 640/என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 31/16                                                                                    29.06.2016
அனைத்து உறுப்பினர்களுக்கும்
அன்பார்ந்த தோழரே,

பட்டப்பகல் படுகொலையை கண்டிப்போம்,
இனி இது போல நடக்காமல் பாதுகாத்திட அரசை வலியுறுத்துவோம்

சில தினங்கள் முன்பாக சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி காலை வேளையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரக் கொலையை நிகழ்த்திய கொலையாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.

தமிழகத்தில் பெண்கள் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களுக்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதற்கும் அரசாங்க இயந்திரம் செயலிழந்து போயிருப்பதற்கும் இந்த கொலை ஒரு சாட்சியமாகும்.

கொலையாளி யார் என்பதைக் கண்டறிய காவல்துறை திணறுவதால் இச்சூழலை சில மதவெறி சக்திகள் பயன்படுத்திக் கண்டு கலவரத்தை தூண்டுமளவிற்கு சமூக வலைத் தளங்களில் வெறியூட்டி வருகின்றனர். சில பிரபல திரைப்பட நடிகர்களும் இவ்வேலையில் ஈடுபட்டுள்ளது மோசமான ஒன்றாகும்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நிறைவேற்றாமல் தமிழக அரசு மெத்தனமாக இருந்து விட முடியாது. சுவாதியை கொலை செய்த உண்மையான கொலையாளியை உடனே கைது செய்திட வேண்டும் என்று வற்புறுத்தியும் பெண்களுக்கான பாதுகாப்பை வழங்குவதை உத்தரவாதம் செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகத்தின் அனைத்து அலுவலகங்களிலும் நாளை 30.06.2016 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

முகநூலில் ஒரு விஷமி செய்த போட்டோஷாப் மூலமாக சேலத்தில் வினுப்பிரியா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவமும் இக்கோரிக்கைக்கான அவசியத்தை அழுத்தமாக உணர்த்துகிறது.

அனைத்து அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி தீர்மானத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைப்போம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒப்பம் எஸ்.ராமன்
பொதுச்செயலாளர்

1 comment:

  1. சுவாதி, வினுப்ரியாவுக்க நடந்த கொடுமைகளோடு குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பதற்கு புதிய செல்போன் லஞ்சம் வாங்கிய போலீஸ் கொடுமையும் உள்ளது.

    ReplyDelete