Thursday, April 14, 2016

அண்ணல் அம்பேத்கருக்கு சிலை வைக்கும் முன்பாக



அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125 வது பிறந்தநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் உரித்தாக்குகிறேன்.

ஹைதராபாத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு 125 அடி உயர சிலை வைக்கப் போவதாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். லண்டனில் டாக்டர் அம்பேத்கர் வாங்கிய வீட்டை இந்திய அரசு விலைக்கு வாங்கியுள்ளது. அங்கே அவருக்கு நினைவகம் அமைக்கப் போவதாகவும் காங்கிரஸ் ஏன் இதை இத்தனை நாள் செய்யவில்லை என்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த ஊரில் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.

எல்லாம் சரி, 1956 ல் அண்ணல் அம்பேகர் புத்த மதத்தை தழுவிய போது அவர் 22 உறுதி மொழிகள் எடுத்துக் கொண்டார். அந்த உறுதிமொழிகள் குறித்து தங்களின் கருத்து என்ன என்பதை கே.சி.ஆரும் மோடியும் சொல்வார்களா?

அது போல அண்ணல் அம்பேத்கரின் அந்த இருபத்தி இரண்டு உறுதிமொழிகளை, பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம்   அவரது சிலையிலோ அல்லது நினைவகத்திலோ கல்வெட்டாக பொறித்து வைப்பார்களா? அல்லது அண்ணல் அம்பேகரின் வரலாற்றை தங்களுக்கு ஏற்ப மாற்றி எழுதுவார்களா?

அண்ணல் அம்பேகரின் அந்த இருபத்தி இரண்டு உறுதி மொழிகளும் நாக்பூரில் உள்ள தீகஷா பூமியில் உள்ள ஒரு தூணில் பொறிக்கப்பட்டு உள்ளது.

கீழேயுள்ள படத்தில் அத்தூணையும் அதற்குக் கீழே அதன் தமிழாக்கத்தையும் பார்க்கலாம்.




1)        பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரை கடவுளாக கருதவோ, வழிபடவோ மாட்டேன்
2)        ராமனையோ கிருஷ்ணனையோ கடவுளாகக் கருதி வழிபட மாட்டேன்.
3)        கௌரி, கணபதி போன்ற ஹிந்து தர்மம் சொல்கிற எவரையும் கடவுளெனக் கருதி தொழ மாட்டேன்.
4)        கடவுள் அவதாரமெடுத்தார் என்பதை ஒருபோதும் நம்ப மாட்டேன்.
5)        புத்தர் விஷ்ணுவின் அவதாரம் எனச் சொல்வது தவறு மட்டுமல்ல, விஷமத்தனமான பிரச்சாரமும் கூட.
6)        திதி போன்றவற்றை நான் செய்ய மாட்டேன்.
7)        புத்த தர்மங்களுக்கு முரணான, எதிரான எதையும் நான் செய்ய மாட்டேன்.
8)        பிராம்மணர்கள் மூலம் எந்த சடங்கையும் செய்ய மாட்டேன்.
9)        அனைத்து மனிதர்களும் சமம் என்பதை நான் நம்புகிறேன்.
10)     சமத்துவத்தை உருவாக்க நான் பாடுபடுவேன்.
11)     புத்தரின் உயரிய கொள்கைகளை பின்பற்றுவேன்
12)     புத்தரின் பத்து கோட்பாடுகள் படி நடந்து கொள்வேன்.
13)     அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பேன்.
14)     நான் திருட மாட்டேன்.
15)     நான் தகாத உறவில் ஈடுபட மாட்டேன்
16)     நான் பொய் சொல்ல மாட்டேன்.
17)     எந்த போதைப்பொருளையும் நான் உட்கொள்ள மாட்டேன்
18)     புத்த தர்மத்தின் மூன்று அடிப்படைகளான ஞானம், கருணை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வேன்.
19)     மனிதகுல வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிற, மனிதர்களை சமமற்றவர்களாகவும் இழிவாகவும் நடத்துகிற ஹிந்து தர்மத்தை துறந்து புத்த தர்மத்தை தழுவிகிறேன்.
20)     இனி புத்த தர்மப்படியே நடந்து கொள்வேன் என சபதமேற்கிறேன்.

21 மற்றும் 22 வது உறுதி மொழிகள் தெளிவாக தெரியாததால் தமிழாக்கம் செய்திட முடியவில்லை.

No comments:

Post a Comment