Tuesday, August 8, 2017

ரொக்க மேடை ... ரிப்ளை ப்ளீஸ் மிஸ்டர் ஃஎப்.எம்




மேலே உள்ள படத்தை பலரும் வாட்ஸப் மூலம் பார்த்திருப்பீர்கள். புத்தம் புது ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுக்களால் அமைக்கப்பட்ட பண மேடை, தாம்பாளத்தில் வைக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் நோட்டுக்கட்டுக்கள், தங்க நகைகளின் குவியல்கள் சகிதமாக ஒரு பெரும் செல்வந்தர் லட்சுமி பூஜை கொண்டாடியதாக படத்துடன் வந்த தகவல் சொல்கிறது. அப்படி கொண்டாடிய செல்வந்தர் மனைவி சகிதம் நிற்கிற புகைப்படமும் கூட உலா வந்து கொண்டிருக்கிறது. இப்பதிவுக்கு அத்தம்பதி அவசியமில்லை என்பதால் அப்படத்தை இங்கே வெளியிடவில்லை.

ஏனென்றால் என் கேள்வி நிதியமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிற கிரிமினல்களின் வக்கீல் அருண் ஜெய்ட்லிக்குத்தான்.

படத்தில் உள்ள பணத்தை தோராயமாக கணக்கிட்டால் குறைந்தபட்சம் நூறு கோடி ரூபாய்க்கு மேல் தேறும். 

நான்கு அடுக்கு மேடை, ஒரு அடுக்கிற்கு பதினோரு வரிசையாக பத்து கட்டு கொண்ட ஐநூறு ரூபாய் கட்டு. அதைத்தவிர உதிரியாய் வைக்கப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் கட்டுக்கள். என் கண்ணிற்கு எட்டியவரை குறைந்தபட்சம் நூறு கோடி ரூபாய் இருக்கும்.

ரொக்கமாக இவ்வளவு ரூபாய் புது நோட்டுக்கள் வைத்துள்ளாரே, அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று கேட்க மாட்டேன். 

இவ்வளவு ரூபாயும் அவர் பழைய நோட்டைக் கொடுத்து மாற்றினாரா? இல்லை நவம்பர் எட்டிற்குப் பிறகு வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணமா? சரி உழைத்து சம்பாதித்த பணம் என்றே வைத்துக் கொள்வோம். 

இவை அனைத்திற்கும் சரியான கணக்கு உள்ளதா என்பதை  நம்ம கிரிமினல் வக்கீல் தலைமையில் உள்ள வருமான வரித் துறை அறிந்துள்ளதா?

சரி இது நாள் வரை தெரியவில்லை என்றே வைத்துக் கொள்வோம். இப்போது இந்த படம் வைரலாகி உள்ளது. இனியாவது கிரிமினல் வக்கீல் தன் அதிகாரிகளை வைத்து சோதனை நடத்துவாரா?

பதில் சொல்லுங்க சார்.

என்ன செஞ்சீங்க? 

அல்லது 

என்ன செய்யப் போறீங்க? 

3 comments:

  1. தோழரே அவசரப்பட்டுவிட்டீர்களே, ஒன்றை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். எவன் ஒருவன் தன்னிடம் இவ்வளவு ரொக்க பணம் இருக்கிறது என்று காட்டுகிறானோ அவனை ஒன்றும் செய்துவிடமுடியாது என்ற நிலையில் தான் படத்தை வெளியிடுவான். ஆக இதை பற்றி விவாதிப்பதில் ஒன்றும் இல்லை. மேலும் இந்த படத்துடன் சிவக்குமாரின் வீட்டில் நடந்த சோதனையின் பதிவு என்று 12 கோடி ரூபாய் பணத்தையும் அனுப்பிருந்தார்கள் பார்த்து இருப்பீர்கள் அதுவும் இந்த வகையே. நாம் இவைகளை எல்லாம் போட்டு அலட்டிக்கொள்ள தேவை இல்லை என்றது எனது தாழ்மையான கருத்து....

    ReplyDelete
  2. கார்ல புது ரெண்டாயிரம் ரூபா ஒட்டி காதலிக்கு பரிசா கொடுத்தவங்களை என்ன செஞ்சாங்களோ! அதான் இவங்களுக்கும் செய்வாங்க

    ReplyDelete
  3. First note and the last note are only original rest of the notes are blank papers. All jewels are gilts. Because of boot licking judiciary system, no body can touch those scoundrels.

    ReplyDelete