Friday, May 27, 2011

ஜாதிய வெறியில் பணி நீக்கம் செய்யப்பட்ட தலித் நீதிபதிகள்

இந்தக் கொடுமை சட்டிஸ்கர் மாநிலத்தில்  நடந்துள்ளது. மாவட்ட துணை 
நீதிபதிகள் மட்டத்தில்  பதினேழு பேர்  கட்டாய ஒய்வு கொடுத்து அனுப்பி 
வைக்கப்பட்டுள்ளனர்.  பதினேழு பேரில்  மூன்று பேர் தாழ்த்தப்பட்ட 
சமுதாயத்தையும்  பதினான்கு பேர் பழங்குடி இனத்தையும் சேர்ந்தவர்கள். 
சட்டிஸ்கர் உயர் நீதி மன்றம் கூறியபடி மாநில சட்ட வாரியம் பரிந்துரைக்க பாஜக அரசு இந்த பதினேழு பேரையும்  கட்டாய ஒய்வு 
என்ற பெயரில் பணி நீக்கம் செய்துள்ளது.  


இந்த நடவடிக்கைக்கு  என்ன காரணம்? 
இவர்களின்  செயல்பாடு திருப்திகரமாக  இல்லை  என்று  சொல்லி  பதவியை  பறித்துள்ளனர்.  இவர்களில் பலருக்கும் ஐந்தாண்டுக்கும் 
மேற்பட்ட பணிககாலம்  உள்ளது.  சிலர்  சமீபத்தில்தான்  பதவி உயர்வு 
பெற்றார்கள். 


பதவி உயர்வு அளிக்கும் போது  தகுதியாக  இருந்த நாங்கள்  எப்படி 
திடீரென்று  தகுதி இல்லாதவர்களாக  மாறினோம்  என்று நியாயமாகவே 
கேட்கிறார்கள். ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை. 


இதிலே மேலும்  ஒரு கொடுமை என்னவென்றால்  இந்த பதினேழு பேரையும்  தவிர  வேறு  யாரும்  பணி நீக்கம் செய்யப்படவில்லை. 
அப்படிஎன்றால்  தலித் நீதிபதிகளைத் தவிர மற்ற ஜாதி நீதிபதிகள் 
எல்லாம் மிகச்சரியாக  பணி செய்வதாய்  சட்டிஸ்கர் உயர் நீதி மன்றமும் 
மாநில பாஜக அரசும்  கருதுகின்றது போலும்! 


பாஜக  ஆட்சிக்காலத்தில்  நீதித்துறை  காவிமயமாகி  விட்டது  என்ற 
குற்றச்சாட்டை  இந்த பணி நீக்கங்கள்  நிரூபித்து விட்டது.  இதிலே 
சட்டிஸ்கர் உயர்நீதி மன்றத்தின்  திறமை பினாயக் சென் விவகாரத்திலேயே  பல்லிளித்து விட்டது  என்பதை யாரும் மறந்திருக்க
முடியாது. 
அப்பட்டமான  ஜாதிய வெறியால் மட்டுமே  நிகழ்ந்துள்ள  இந்த 
பணி நீக்கங்களை  கண்டிப்போம்.  அவர்களை மீண்டும் பணியில் 
அமர்த்தச்சொல்லி  சட்டிஸ்கர் மாநில அரசை வலியுறுத்துவோம். 
கடிதங்கள் அனுப்புவோம், தந்திகள் அனுப்புவோம், நம்மால் 
என்னவெல்லாம் இயலுமோ  அனைத்தையும்  செய்வோம்.  

1 comment:

  1. என்று ஒழியுமோ இந்த கெர்டுமை...
    சாதி வெறி மேல்தட்டுவரை பரவ ஆரம்பித்துவிட்டது...

    ReplyDelete