Monday, May 16, 2011

பண மாற்றம் இல்லாததால் ஆட்சி மாற்றமா?




தமிழக தேர்தல்கள் குறித்து  எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் 
சங்கத்தின் மதுரைக் கோட்டத் துணைத்தலைவர்  தோழர் சி.சந்திரசேகரன் எழுதிய  அற்புதமான கவிதைகள்  இங்கே  உங்களுக்காக, அவரின் அனுமதியோடு




பணமென்றால் 
பிணம்தான் 
வாய் திறக்கும், 
தமிழனுக்குத் 
தெரிந்தது,
தலைவருக்குத் 
தெரியவில்லை. 

**************************************
கலைந்தது 
ஆட்சிக்கனவு மட்டுமல்ல,
திருமங்கலம் 
ஃ பார்முலா  கூடத்தான் 

**************************************
குடும்பத்திற்கு 
உழைத்தவருக்கு 
ஒய்வு எட்டு மணி நேரம்,
குடும்பங்களுக்கு 
உழைத்தவருக்கு
ஐந்து வருடங்கள் 
**************************************

ஐந்து வருட
ஓய்விற்குப் பின்
மிதக்க வருகின்றேன் ,
கட்டைக்குரலில் 
சொன்னது 
கடலில் 
தூக்கியெறியப்பட்ட
கட்டை 






***************************************

பணம் பத்தும் செய்யும் 
பிரவீன் குமார், சகாயம்,
சங்கீதா இல்லாதவரை. 

****************************************

பணம் மாறுவதில் 
சிக்கல் - 
ஆட்சி மாற்றம்

**************************************** 


ஓவருக்கு 
ஆறு பந்துகள் 
அதுவும் 
ஒவ்வொன்றாக 
பேட்ஸ்மேனுக்கு. 
கல்கத்தா 
பிரிமியர் லீக்கில் மட்டும் 
அறுபது பந்துகள் 
ஒரே நேரத்தில்.
புத்தா விக்கெட் 
வெளியேறியதில்
வியப்பென்ன? 

******************************
  

No comments:

Post a Comment