Monday, May 23, 2011

பரிதவிக்கும் பால்கார முனியம்மா செய்த தவறென்ன? நல்ல காங்கிரஸ் கலாச்சாரம் இது!




இன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றில் படித்த விஷயம் இது. கோட்ட மேலாளரோடு  பேசுவதற்காக சென்ற போது அவர் அறை முன்பாக 
இருந்த செய்தித்தாள். அது எக்ஸ்பிரஸா அல்லது டைம்ஸ் ஆப் 
இந்தியாவா என்று நினைவில்லை. 

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய சிவராசனை காட்டிக் கொடுத்ததற்காக  அளிப்பதாக  உறுதி அளிக்கப்பட்ட  பத்து 
லட்சம் ரூபாய்  பரிசுத்தொகையில்   அறுபதாயிரம் மட்டுமே  கொடுத்து
மீதத்தை இன்னமும் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றார்கள் 
என்பது அவர் குற்றச்சாட்டு. 


பெங்களூரில்  சிவராசனும் கூட்டாளிகளும் தங்கியிருந்த வீட்டைப் 
பற்றியும் பால் ஊற்ற போன போது  அவர்கள் பேசிக்கொண்ட விபரங்கள்
பற்றி கூறியதால்தான் அதிரடிப்படை  வளைத்தது என்று சொல்கின்ற 
பால்கார முனியம்மா பத்து லட்சம் ரூபாய் தருவதாக சொல்லி விட்டு 
ஏமாற்றி விட்டார்களே  என்று புலம்பியுள்ளார். 


காவல் நிலையம், நீதி மன்றம் என்றெல்லாம் அலைந்ததால் தனது 
தொழிலை கவனிக்க முடியவில்லை, மாடுகள் இறந்து போய் விட்டது, 
மகனை காவலர் பணியில் சேர்க்க கேட்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய்
லஞ்சத்தை அளிக்க முடியவில்லை, மிரட்டல்கள் வேறெல்லாம் வந்தது
என்றெல்லாம் கூறுகின்ற  அவர்  இறுதியாக பிரியங்கா காந்தி நளினியை
சந்தித்தது பற்றி கூறும் போது சிவராசன் தங்கிய வீட்டை அடையாளம் 
காட்டியதுதான் தான் வாழ்க்கையில் செய்த தவறு என்று முடிக்கிறார்.


இதிலிருந்து தெரிவது ஒன்றுதான். காங்கிரஸ் கட்சிக்கு ராஜீவ் காந்தி
வெறும் ஒரு பிம்பம் மட்டுமே. தேவைக்கு  மட்டுமே பயன்படுத்தக் 
கூடிய பிம்பம் . ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி இலங்கையில்
தமிழ் இனத்தையே அழிப்பார்கள். ஆனால் அக்கொலைக்கு காரணமான
ஆட்களை அடையாளம் காட்டியவருக்கு நியாயமாக அளிக்க வேண்டிய 
பரிசையும் அளிக்க மாட்டார்கள். 
\
இதுதான் காங்கிரஸ் கலாசாரம். 

    

1 comment: