Thursday, May 19, 2011

தூ. . . வெட்கம் கெட்டவர்களே!

 சம்பவம்  1 

கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில்  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை 
கிடையாது. சுயேட்சைகளுக்கு    கோடிகளை  அள்ளிக் கொடுத்து 
பாஜக ஆட்சி அமைக்கிறது. 

சம்பவம் 2 

காங்கிரஸ் உறுப்பினர்கள் தாவுகின்றார்கள். ராஜினாமா செய்து 
பாஜக வேட்பாளராகி இடைத்தேர்தலில்  வெற்றி பெறுகின்றனர். 
எட்டியூரப்பா தலை தப்பிக்கிறது. 

சம்பவம் 3 

சுரங்கப் புகழ் ரெட்டி சகோதரர்களால் அவ்வப்போது எட்டியூரப்பா
நாற்காலி தடுமாறுகின்றது.  உள்ளே புகுந்து தாம் நாற்காலியை 
தட்டிசசெல்லலாமா என்று காங்கிரஸ் நாவில் எச்சில் ஒழுக 
பரத்வாஜை கவர்னராக அனுப்புகின்றது. 

சம்பவம் 4 

எட்டியூரப்பாவை ஆதரித்த சுயேட்சைகள்  ஆதரவை வாபஸ் 
பெறுகின்றார். 

சம்பவம் 5 

நம்பிக்கை வாக்கு பெற கவர்னர் சொல்கின்றார். ஆதரவு வாபஸ் 
பெற்ற சுயேட்சைகளின் பதவியை சபாநாயகர் பறிக்கிறார். எட்டியூரப்பா பதவி மீண்டும் பிழைக்கிறது. 

சம்பவம் 6 

சுயேட்சைகளை சபாநாயகர் போட்டுத்தள்ளியது சரியல்ல, பதவியில் 
அமர்த்து என்று  உச்ச நீதிமன்றம் சொல்கின்றது. 

சம்பவம் 7 

எட்டியூரப்பவிற்கு ஆதரவை வாபஸ் பெற்ற சுயேட்சைகள் மீண்டும் 
பதவி பெறுவதால் அவருக்கு பெரும்பான்மை கிடையாது. ஜனாதிபதி
ஆட்சியை அமுலாக்கு என்று கவர்னர் பரத்வாஜ் பரிந்துரை. 

சம்பவம் 8 

ஆதரவு வாபஸ் பெற்ற சுயேட்சைகள் மீண்டும் பல்டி. எத்தனை கோடிகள்
நடுவில் விளையாடியது என்ற தகவல் இல்லை. 

சம்பவம் 9 

பரத்வாஜை திரும்பப்பெறு, எட்டியூரப்பாவை நீக்காதே என பாஜக
போர்க்கொடி, டெல்லிக்கு காவடி, ஒன்னு,ரெண்டு, மூணு என 
ஜனாதிபதி முன்பு தலை எண்ணுதல். 

இறுதியாக இப்போது.

எட்டியூரப்பாவிற்கு முழுமையான  பெரும்பான்மை உள்ளது. அவரது
நல்லாட்சி தொடரும் - இது பரத்வாஜ் 

ஆளுநர் நல்ல மனிதர், எனது இனிய நண்பர் - இது எட்டியூரப்பா 

மொத்தத்தில்  எட்டியூரப்பா, அவரது சகாக்கள், கவர்னர் எனும் ஆட்டுத்தாடி பரத்வாஜ், 
சபாநாயகர், சுயேட்சை எம்.எல்.ஏ க்கள், 
காங்கிரஸ் கட்சி, பாஜக, சீச்சீ இந்த பழம் 
புளிக்கும் என்பதால் யோக்கிய அவதாரம் 
எடுத்த மத்தியரசு என எல்லோருமே

வெட்கம்கெட்டவர்கள்...தூ... 


                  

3 comments:

  1. செருப்படி...................

    ReplyDelete
  2. தூ..தேரிக்கா ........

    ReplyDelete
  3. வெட்கம்கெட்டவர்கள்...தூ...

    ReplyDelete