வழக்கமாக சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்புதான் சர்ச்சை வரும். இந்தாண்டு முன்பே வந்து விட்டது.
நேற்று மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி விருதுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் அது ரத்து செய்யப்பட்டதாக பின்பு அறிவிக்கிறார்கள்.
காரணம் என்ன என்பதை கீழே உள்ள தமுஎகச அறிக்கை சொல்லும்.
சாகித்ய அகாதமியின் சுயேட்சையான செயல்பாட்டில் ஒன்றிய அரசின் தலையீடு கண்டிக்கத்தக்கது.
- தமுஎகச மாநிலக்குழு
இந்த ஆண்டும் அதே போல் 24 மொழிகளின் குழுக்களும் தங்கள் தேர்வுப் பட்டியலை தயார் செய்துவிட்டன. அதன் அடிப்படையில் நேற்று 18.12.2025 மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெற இருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விருது அறிவிப்பு வெளியாகும் என்று இருந்தது. நாடு முழுக்க உள்ள இலக்கிய ஆர்வாளர்கள் சாகித்ய அகாதமி விருதுப் பட்டியலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தச் சூழலில் திடீரென்று அந்தச் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சாகித்ய அகாதமி குழுக்களின் தேர்வுகளில் ஒன்றிய அரசின் அமைச்சகம் தலையீடு உள்ளதாக செய்திகள் வருகின்றன. இது சாகித்ய அகாதமி எனும் நிறுவனத்தின் சுயேட்சையான செயல்பாட்டை முடக்கும் செயலாகும். இது போன்ற நேரத்தில் சாகித்ய அகாதமி நிறுவனம் தனது தன்னாட்சி அதிகாரத்தை காத்திட உறுதியோடு செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களையும் கைப்பற்றும் அரசியல் வேலையை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதைப்போல சாகித்ய அகாதமி நிறுவனத்தின் சுயேட்சையான செயல்பாட்டை முடக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டிக்கிறது. அனைத்து மொழிகளின் குழுக்களும் தேர்வு செய்த விருத்தாளர்களின் பட்டியலை எந்தத் திருத்தமும் இல்லாமல் வெளியிடும் அதே முறையை இந்த ஆண்டும், இனி வரும் ஆண்டுகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தமுஎகச கேட்டுக் கொள்கிறது.
*மதுக்கூர் இராமலிங்கம்*
தலைவர்
*களப்பிரன்*
பொதுச்செயலாளர்
தமுஎகச அறிக்கையில் குறிப்பிடாத முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. இந்த ஆண்டு தமிழுக்காக தமுஎகச வின் முக்கியமான தலைவரும் மிகச் சிறந்த எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "தமிழ்ச் சிறுகதைகளின் தடம்" நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதுதான் அந்த செய்தி.
இறுதிப்பட்டியலில் மோடியின் அல்லக்கை மாலனின் பெயரும் இருந்த போதும் ஒரு இடதுசாரி எழுத்தாளருக்கு விருது கொடுப்பதா என்பதுதான் ஒன்றிய அரசின் கடுப்பிற்கு காரணம்.
இடதுசாரிகளே விருதுகளை பெறுகிறார்கள் என்று ஆஜான் போன்ற சங்கிகள் மத்தியில் ஒரு பொறாமை எப்போதும் உண்டு.
அவர்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.
சங்கிகளும் உருப்படியாக எதையாவது எழுத வேண்டியதுதானே! தந்தை பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் அசிங்கப்படுத்துவதற்கு என்றே சோ.அதர்மன் எழுதிய "சூல்" நாவலுக்குத்தான் விருது கிடைத்ததே, அது போன்ற குப்பையைக் கூட உங்கள் ஆட்களால் எழுத முடியாத போது சிறந்த எழுத்தாளர்கள் உரிய அங்கீகாரம் பெறுவதை சகிக்க முடியாத மோடி வகையறாக்கள் எல்லாம் ஆட்சி நடத்தவே அருகதையற்றவர்கள்.

No comments:
Post a Comment