கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சங்கிகள் பல இடங்களில் தங்கள் புத்தியை காண்பித்துள்ளார்கள்.
கேரளா போன்ற மாநிலங்களில் கூட அவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து சில கல்வி நிறுவனங்கள் அவர்கள் வழக்கமாக நடத்தும் கிறிஸ்துமஸ் விழாக்களை ரத்து செய்து விட்டன. இத்தனைக்கும் கேரளாவில் சில கிறிஸ்துவ அமைப்புக்கள் பாஜகவைத்தான் ஆதரிக்கின்றன. அதை சங்கிகள் பெருமையாகவும் பீற்றிக் கொண்டிருக்கின்றனர்.
பாஜக ஆளும் பல மாநிலங்களில் இன்று கிறிஸ்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒடிஷா, உத்தர்கண்ட், மத்தியப் பிரதேசம், டெல்லி, உ.பி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இவ்வளவு அக்கிரமங்களை சங்கிகள் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் இன்றைய போட்டோ ஷூட்டுக்காக ஒரு சர்ச்சிற்கு சென்று அவர் பதிவு போட, மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் அதை பாராட்டி பதிவு போடுகிறார்.
தன் ஆட்கள் அயோக்கியத்தனம் செய்யும் வேளையில் அமைதி, நல்லெண்ணம் என்று கதை விட மோடிக்கும் வெட்கமில்லை.
மோடியின் பொய்யான பதிவை பாராட்ட சங்கிகளுக்கும் வெட்கமில்லை.
பிகு : எதிரொலி திரைப்படத்தில் சிவாஜி சாட்சியை முறைத்துக் கொண்டே நிற்க, அந்த பார்வையை தாங்க முடியாமல் சாட்சி உண்மையை சொல்லி விடுவார்.



No comments:
Post a Comment