நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் ஆற்றிய அற்புதமான, ஆவேசமான, அர்த்தம் மிக்க உரை.
அவசியம் கேளுங்கள்.
என்னைப் போல மீண்டும் மீண்டும் கேட்பீர்கள் . . .
வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டை கொண்டாடுவதில் உள்ள போலித்தனத்தை மட்டுமல்ல பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய தீர்ப்பாளர் பற்றியும் பேசுவது ஆணித்தரமானது.
இந்த உரையில் தோழர் சு.வெ எழுப்புகிற மூன்று கேள்விகளுக்கு மோடியாலோ அல்லது சங்கிகளாலோ பதில் சொல்ல முடியுமா?
வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், இன்குலாப் ஜிந்தாபாத் ஆகிய மூன்று முழக்கங்களின் பின்னணியில் லட்சக்கணக்கானவர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
எந்த முழக்கத்தின் கீழ் நீங்கள் விடுதலைக்காக திரண்டீர்கள்?
"ஈஸ்வர அல்லா தேரா நாம்" என்ற முழக்கத்தை ஒரு முறையாவது உங்கள் உதடுகள் உச்சரித்துள்ளதா?
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிவன், விஷ்ணு, துர்கா என்று பனிரெண்டு திரு உருவச் சிலைகளை வைத்துள்ளீர்கள். கிறிஸ்துவத்திலிருந்து ஒரு திரு உருவச்சிலையோ, திருக்குரானின் அடையாளத்தில் எதுவுமோ உங்களுக்குக் கிடைக்கவில்லையா?
பதில் சொல் மோடி.
உம்மால் முடியாது, முடியாது, முடியாது.

No comments:
Post a Comment