தமிழ்நாட்டின் கலவர மையமாக திருப்பரங்குன்றத்தை மாற்ற சங்கிகள் முயற்சிக்கின்றனர். ராமரை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதால் முருகரை கையில் எடுத்துள்ளனர். வேல் யாத்திரை, முருகர் மாநாடு ஆகியவை காமெடிகளாக முடிந்து போனதால் ரத யாத்திரை என்ற பெயரில் ரத்தத்தை ஓட விட்டது போல இங்கேயும் கலவரத்தை தூண்டி மக்களை மத ரீதியில் மோத வைக்க முயல்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் கோயில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதை அங்கே உள்ள தர்காவின் வாசலில் உள்ள தூணில்தான் ஏற்றுவோம் என்று கலவர நோக்கில் சங்கிகள் பிரச்சினை எழுப்பி வருகின்றனர். அதை தீபத்தூண் என்று சொல்வதே தவறு, நில அளவைக் கல் என்று பலரால் சொல்லப்படுகிறது.
இப்போது பிரச்சினை ஏன் தீவிரமானது? கலவரம் வெடிக்கும் சூழல் யாரால் உருவானது?
சாமி படத்தில் விக்ரம் பேசும் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. அதையே "நான் நீதிபதி இல்லை சங்கி" என்று பேசுவதற்குப் பதிலாக நடவடிக்கைகளில் காண்பித்துக் கொண்டிருக்கிற ஒருவர். அந்த மனிதருக்கு என் அப்பாவின் பெயர். எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பெயரும் அதுதான். அவர்களால் சுவாமிநாதன் என்ற பெயருக்கு பெருமை. இவராலோ?
கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற அவர் வழி வகுக்கிறார். தர்காவின் வாசலில் உள்ள தூணில் இன்று முதல் தீபம் ஏற்றுங்கள் எம்று தீர்ப்பளிக்கிறார். தர்கா வழிபாட்டை எல்லாம் முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளலலாமா? அது குரானுக்கு முரணானது இல்லையா என்றும் முஸ்லீம்களுக்குள் சிண்டு முடிய முயற்சி செய்தார்.
அவர் அளித்த தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கின் நோக்கமும் தீர்ப்பின் நோக்கமும் பக்தியின் அடிப்படையில் ஆனது என்ற தெளிவு இருந்ததால் அத்தீர்ப்பை அமலாக்கவில்லை. தமிழ்நாட்டை குஜராத் ஆக மாற்ற நடந்த முயற்சியும் வெற்றி பெறவில்லையும்.
அதனால் வெகுண்டெழுந்து வழக்கு போட்டவர் பத்து பேரோடு போய் மத்திய தொழிற்சாலை காவல் படையின் துணையோடு அந்த தூணில்தான் விளக்கேற்ற வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். 144 தடை உத்தரவு இருந்ததால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
மத்திய , மாநில காவல் படைகளுக்குள் மோதலை உருவாக்க நினைத்ததும் நடக்கவில்லை.
"நான் மட்டும் நீதிபதியாக இல்லாமல் இருந்திருந்தால் நானே அங்கே தீபமேற்றியிருப்பேன்" என்று வஜனம் பேசியதாக வேறு சொல்கிறார்கள்.
அவருக்கு சிலவற்றை பணிவோடு சொல்ல ஆசைப்படுகின்றேன்.
நீங்கள் நீதிபதியாக இல்லாதிருந்தால்
144 தடைச்சட்டத்தின் படி நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.
மத மோதல்களை தூண்டிய குற்றத்திற்காக உங்களைப் போல அல்லாமல் வேறு நியாயமான நீதிபதி முன்பாக நிறுத்தப்பட்டிருந்தால் சிறைத் தண்டனை கூட வழங்கப்பட்டிருக்கலாம்.
உங்களை பாதுகாத்து வருவது உங்கள் நீதிபதி பதவிதான், அதற்கு நீங்கள் கொஞ்சமும் அருகதை அற்றவர் என்ற போதிலும் . . . .

No comments:
Post a Comment