ரஷ்ய - உக்ரைன் போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைனை டம்மியாக வைத்துக் கொண்டு அமெரிக்காவும் நேடோவில் உள்ள ஐரோப்பிய நாடுகள் நடத்திய போர்தான் அது.
ட்ரம்ப் வந்தவுடன் அவர் உக்ரைன் ஜனாதிபதி ஜேலென்ஸ்கியை கிறுக்கன் என்று திட்டுகிறார்.
ஒரு கிறுக்கனே
இன்னொரு கிறுக்கனை
கிறுக்கன்
என்று சொல்கிறானே!
அடடே
ஆச்சர்யக்குறி.
நேற்று ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் ஐ.நா சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறது.
இது நாள் வரை உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களித்த அமெரிக்காவும் அதன் கூட்டாளி இஸ்ரேலும் ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. முழு விபரம் கீழே . . .
சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல அமெரிக்காவின் பல்டிக்குப் பின்னே ஏதோ கணக்கு இருக்கிறது. அதன் பாதிப்பு ரஷ்யாவுக்கா உக்ரைனுக்கா என்பது சீக்கிரம் தெரிய வரும்.
No comments:
Post a Comment