நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி வந்திருந்தது. கும்பமேளாவில் குளித்த புண்ணியம் சிறைவாசிகளுக்கு கிடைக்க மொட்டைச்சாமியார் நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டிருந்தது. ஆஹா! கும்பமேளாவை முன்னிட்டு சிறைவாசிகள் எல்லோருக்கும் விடுதலை அல்லது பரோல் கொடுக்கப் போகிறார்களா அல்லது சிறைவாசிகளை அலகபாத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்களா என்று ஆவலோடு மேலே படித்தேன்.
கும்பமேளாவிலிருந்து தண்ணீரை உ.பி யில் உள்ள எல்லா சிறைச்சாலைகளுக்கும் எடுத்துக் கொண்டு போய் அங்கே உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியில் கலந்து விடுவார்களாம். அப்படி கும்பமேளா தண்ணீர் கலக்கப்பட்ட தண்ணீரில் குளித்தால் அவர்களுக்கு கும்பமேளாவில் குளித்த புண்ணியம் கிடைத்து விடுமாம்.
மொட்டைச்சாமியார்
ரேஞ்சிற்கு யோசிக்க மாட்டேங்கறாங்களே!
No comments:
Post a Comment