Thursday, February 20, 2025

சிறைவாசிகள் மீது என்னே அக்கறை!

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி வந்திருந்தது. கும்பமேளாவில் குளித்த புண்ணியம் சிறைவாசிகளுக்கு கிடைக்க மொட்டைச்சாமியார் நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டிருந்தது. ஆஹா! கும்பமேளாவை முன்னிட்டு சிறைவாசிகள் எல்லோருக்கும் விடுதலை அல்லது பரோல் கொடுக்கப் போகிறார்களா அல்லது சிறைவாசிகளை அலகபாத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்களா என்று ஆவலோடு மேலே படித்தேன்.

கும்பமேளாவிலிருந்து தண்ணீரை உ.பி யில் உள்ள எல்லா சிறைச்சாலைகளுக்கும் எடுத்துக் கொண்டு போய் அங்கே உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியில் கலந்து விடுவார்களாம். அப்படி கும்பமேளா தண்ணீர் கலக்கப்பட்ட தண்ணீரில் குளித்தால் அவர்களுக்கு கும்பமேளாவில் குளித்த புண்ணியம் கிடைத்து விடுமாம்.

 அடேங்கப்பா! சிறைவாசிகளுக்கு புண்ணியம் கிடைக்க எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்! உருப்படியா மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டாலும் இந்த மாதிரி யோசனை மட்டும் எப்படி வருதோ?

 இங்கே தமிழ்நாட்டிலும்தான் இருக்கிறார்களே! சிறைவாசிகளுக்கு நல்ல வாசிப்பனுபவம் கிடைக்க வேண்டும், அவர்களின் அறிவுத்திறன் பெருக வேண்டும் என்பதற்காக எந்த ஊரில் புத்தக விழா நடந்தாலும், அங்கெல்லாம் "கூண்டுக்குள் வானம்" என்ற பெயரில் ஒரு அரங்கம் அமைத்து வாசகர்களிடமிருந்து புத்தகங்களை திரட்டி சிறை நூலகத்தை மேம்படுத்தி வாசிப்பை ஊக்குவிக்கிறார்கள்.

 


மொட்டைச்சாமியார் ரேஞ்சிற்கு யோசிக்க மாட்டேங்கறாங்களே!

 பிகு: வேலூர் புத்தக விழாவின் போது சிறைவாசிகளுக்கு என்னுடைய சேகரிப்பில் இருந்த சில புத்தகங்களை கொடுத்த போது எடுத்த படம் மேலே.

 

No comments:

Post a Comment