Monday, February 17, 2025

மஹா கும்பமேளா என்பதும் மோசடியா மோடி?

 


இப்போது அலகாபாத்தில் நடந்து கொண்டிருக்கும் கும்ப மேளாவை 144 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் “மஹா கும்பமேளா” என்றுதான் மோடி, மொட்டைச்சாமியார் வகையறாக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது.

நிஜமாகவே இந்த வருட கும்பமேளாதான் 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்பமேளாவா?

இல்லை.

நிச்சயமாக இல்லை.

 அதற்கு என்ன ஆதாரம்?

 வயர் இணைய தள இதழ் ஒரு ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

 2023 ம் வருடம் மொட்டைச்சாமியார் அரசு பெரும் திரள் கூடல்களின் போது விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கையிலேயே 2013 ம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்றது 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்பமேளா என்று குறிப்பிட்டுள்ளது.

 


பின் எப்படி இப்போது நடைபெறுவதை மஹா கும்பமேளா என்று சொல்கிறார்கள்?

 எங்கள் ஆட்சிக்காலத்தில்தான் மஹா கும்பமேளா நடைபெற்றது என்று வெட்டிப் பெருமை பேசிக் கொல்ல (எழுத்துப் பிழை அல்ல, 144 வருடங்கள் என்ற பில்ட் அப் கொடுத்ததன் விளைவாகத்தான் மக்கள் அங்கே அதிகமாக சென்று நெரிசலில் சிக்கி இறக்கிறார்கள்) பொய் சொல்கிறார்கள்.

எதையெடுத்தாலும் பொய்,  எதற்கெடுத்தாலும் பொய்.

 பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்ட மானங்கெட்டவர்கள். இதிலே கார்ட்டூன் போட்டால் மானம் போய் விட்டது என்று கூச்சல் வேறு,

No comments:

Post a Comment