Saturday, February 15, 2025

பக்தியின் பெயரால் சதுரங்க வேட்டை

 


இதை நம்பி எத்தனை பேரோ?

 நேற்று முகநூலில் பார்த்த விளம்பரம் கீழே. 



இதில் குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு (நம் பதிவை பார்க்கும் சங்கிகள் யாரும் அனுப்பக்கூடாது என்பதற்காக நான் இங்கே மறைத்து விட்டேன்) புகைப்படத்தை 500 ரூபாய் பணத்தோடு அனுப்பினால் புகைப்படத்தை பிரதி எடுத்து கங்கையில் அவர்கள் முங்கும் போது அதையும் சேர்த்து முக்குவார்களாம். இதன் மூலம் 144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்ற புண்ணியம் உங்களுக்கு கிடைக்குமாம். உங்கள் முன்னோர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்களாம். தெய்வீக அருள் கிட்டுமாம்.

 அப்பாவி மக்களின் பணத்தை சுரண்ட சங்கி மோசடிக்கும்பல்,    ரூம் போட்டு யோசிக்கும் போல.

 இதை நம்பி எத்தனை முட்டாள் சங்கிகள் 500 ரூபாய் அனுப்பப் போகிறார்களோ, மொட்டைச்சாமியாருக்கே வெளிச்சம்!

 பக்தியின் பெயரால் நடைபெறும் சதுரங்க வேட்டைகளில் இதுவும் ஒன்று.

No comments:

Post a Comment