Tuesday, February 11, 2025

அது ஒரு நிலாக்காலம்

 



இன்று தைப்பூசம். அலுவலகத்திற்கு விடுமுறை. பயணத்தில் முக்கால்வாசி முடித்த நூலை முடித்தது, மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கி சிகண்டிகளோடு போட்டுக் கொண்டிருந்த சண்டையும் ஒரு கட்டத்தில் போரடித்து விட்டது.

அப்போதுதான் ஒரு தைப்பூச நாள் நினைவுக்கு வந்தது. 

அது 1999 ம் வருடம். அப்போது வாஜ்பாய் அரசு கொண்டு வந்திருந்த ஐ.ஆர்.டி.ஏ மசோதாவிற்கு எதிராக நாடு முழுதும் கையெழுத்து இயக்கம் நடந்து கொண்டிருந்தோம்.

எங்கெங்கு மக்கள் கூடுகிறார்களோ, அங்கெல்லாம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்க்ள், பிரசுரத்தோடும் கையெழுத்து படிவம் உள்ள அட்டையோடும் இருப்பார்கள்.

கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், கண்காட்சிகள், சந்தைகள், பேருந்து, ரயில் நிலையங்கள் என எல்லா இடங்களிலும் எங்களை பார்த்திருப்பீர்கள்.

1999 ம் வருட தைப்பூச நாள், அன்று முழு நிலவு நாளும் கூட. மக்கள் அதிகம் திரளக்கூடிய திருவண்ணாமலை கிரிவலத்தின் போதும் வடலூர் தைப்பூசத்தின் போதும் கையெழுதுக்கள் திரட்டுவது என்று முடிவு செய்தோம். திருவண்ணாமலை, வடலூர் ஏன் என்றால் இரண்டு பகுதிகளும் எங்கள் கோட்டப்பகுதிக்குள் இருப்பவை.

வேலூரிலிருந்தும் கிட்டத்தட்ட முப்பது தோழர்களுக்கு மேல் திருவண்ணாமலை சென்றிருந்தோம். திருவண்ணாமலை கிளையில் இருந்தும் வந்திருந்தார்கள். அதே போல வடலூருக்கு கடலூர் மற்றும் நெய்வேலி தோழர்கள் சென்றார்கள். வேலூரிலிருந்து கூட நான்கு தோழர்கள் சென்றார்கள்.

ஒரு மூன்று மணி நேரம் மட்டுமே எங்களால் கையெழுத்துக்களை திரட்ட முடிந்தது. அப்போது திரட்டிய கையெழுத்துக்கள் 25,000. அதை விட அதிகமானவர்களிடம் எங்கள் செய்தி சென்றது. 

இப்போதையை அவசர உலகில் மக்கள் பொறுமையாக நின்று கையெழுத்திட்டு செல்வார்களா? அரசுக்கு எதிரான இயக்கத்தை ஏவல் துறை அனுமதிக்குமா?  சங்கிகள் எப்படிப்பட்ட இடையூறுகள் செய்வார்கள்? என்பதையெல்லாம் யோசித்து பார்க்கையில் நிச்சயமாக அது ஒரு நிலாக்காலம்தான். . . 

No comments:

Post a Comment