இலக்கிய உலகைச் சேர்ந்த யாராவது இறந்து விட்டால் புளிச்ச மாவு ஆஜானுக்கு சந்தோஷம் ஊற்றெடுத்து ஓடத் தொடங்கி விடும்.
தஞ்சை பிரகாஷ்,
ஃபிரான்ஸிஸ் கிருபா,
சுஜாதா
அசோகமித்திரன்
ஆகியோரையெல்லாம் தன் அஞ்சலிக் குறிப்பால் அவர்களுக்கு மரணத்துக்கு பிந்தைய அவதூறு தண்டனை கொடுத்தார்.
அவரது இந்த பிரதாபம் குறித்து முன்பும் கூட சில பதிவுகள் எழுதியிருக்கிறென்.
நினைவுக்கு வந்த சிலவற்றின் இணைப்பு கீழே
ஆஜானுடைய பார்வதிபுரத்தைச் சேர்ந்த பாட்டையா பாரதி மணி இறந்த போது மட்டும் ஆஜான் அஞ்சலி குறிப்பை எழுதவில்லை. அதன் காரணம் என்ன?
இந்த இணைப்பை பாருங்கள்.
இதெல்லாம் பழைய கதை.
சமீபத்தில் ஆஜானிடம் சிக்கியவர் ரமேஷ் பிரேதன்.
அவருக்கு நினைவஞ்சலி என்ற பெயரில் ஆஜான் எழுதியுள்ளதை படியுங்கள்.
சென்ற 2019 ல்
ரமேஷ் என்னிடம் “எனக்கு விஷ்ணுபுரம் அவார்டு குடுய்யா” என்றார்.
“இப்ப என்ன அப்டி அவசரம்? வாலிப வயசுதானே?” என்றேன்.
“பணம் தேவை இருக்கு” என்றார்.
“பணம்தானே? அத அனுப்பிடறோம்…” என்றேன். அந்தப் பணத்தை
அனுப்பினோம்.
அதன்பின் மீண்டும் 2021 ல் அழைத்தார். “இப்பயாச்சும் அவார்டு
குடுய்யா. நான்லாம் கோவிட்ட தாண்டமாட்டேன்”
என்றார்.
“உங்களுக்கெல்லாம் கல்
மாதிரி ஆயுசு… அவார்டு முறையாத்தான் வரும்… சின்னப்பசங்களுக்கு குடுக்கிற அவார்டு இல்ல இது” என்றேன்.
அதன்பின் அவ்வப்போது தன் ஆயுள்
முடிவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் கோவிட் அதன்பின் வந்த ஒரு
நெருக்கடிக்காலம் ஆகியவற்றை கடந்துவிட்டார். அவருக்கு விருதை வரிசையை முந்திக்கொண்டு அறிவிப்பதே அவருடைய உடல்நிலை, ஆயுள் பற்றி நானும் ஐயப்படுகிறேன் என்று ஆகிவிடுமோ என்னும்
குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஆகவே அவருடைய நிரந்தர ஐயத்தை வேடிக்கையாகவே
கடந்துகொண்டிருந்தேன்.
இந்த முறை அவருக்கு இயல்பாகவே
வரிசையில் இடம் அமைந்தது. அதை ஆகஸ்டில் அவரிடம் சொன்னேன். “இப்பவே குடுத்திரு… டிசம்பரில் நான்
இருக்கமாட்டேன்” என்றார்.
“நீங்க இருப்பீங்க….” என்றேன்.
மீண்டும் ஜூனில் அழைத்து “செப்டெம்பரில் தூரன் விழாவோட சேத்தே நடத்திரு… இருப்பேனான்னு தெரியலை”
என்றார்.
2011
ல்
வெள்ளையானை நாவல் நண்பர் அலெக்ஸின் எழுத்து பிரசுர வெளியீடாக வந்தபோது அவர்
புதுச்சேரியில் ஒரு மதிப்புரைக்கூட்டம் ஏற்பாடு செய்தார். அந்நிகழ்ச்சி முடிவில்
மீண்டும் ரமேஷைச் சந்தித்தேன். மெலிந்து ஒடுங்கி அழுக்கு வேட்டியும் சட்டையுமாக
இருந்தார்.
“நல்லா இருக்கீங்களா?” என்று சம்பிரதாயமாகக் கேட்டேன்.
“நல்லா இல்லை” என்றார்.
நிகழ்ந்ததை அவர் சொன்னார். பிரேம், மாலதி இருவரும் அவரை கைவிட்டுவிட்டதாகவும், ஓராண்டுக்குமேல் ஒரு தோப்பில் காவலராக பணியாற்றியதாகவும், உடல்நிலை மோசமாக ஆனதனால் அவ்வேலையைச் செய்யமுடியாமல் அப்போது
பாரதி நினைவில்லம் வராந்தாவில் வாழ்வதாகவும் சொன்னார். உறவினர்களிடம் செல்ல அவர்
விரும்பவில்லை. உறவுகளை முன்னரே அவர் வெட்டிவிட்டிருந்தார். இரண்டு முனைவர்பட்ட
ஆய்வாளர் நண்பர்கள் உணவு வாங்கி அளித்து உதவிவருவதாகவும் பெரும்பாலும் நினைவில்லம்
வருபவர்களிடம் கையேந்தி வாழ்வதாகவும் சொன்னார். “பிச்சை
எடுக்கிறேன் ஜெயமோகன்” என்றார்.
நான் உணர்ச்சிவசப்பட்டு அவர் கைகளைப்
பற்றிக்கொண்டேன். “நான் சாப்பிடுற வரை
நீங்களும் சாப்பிடுவீங்க. நான் கூரைக்குக் கீழே இருக்கிற வரைக்கும் நீங்க தெருவிலே
இருக்க மாட்டீங்க” என்றேன்.
அன்றே அவரை ஒரு வாடகை அறையில் அலெக்ஸ்
உதவியுடன் தங்கவைத்தேன். ஒரு வாரத்தில் மணி ரத்னம் அளித்த நிதி, என் சொந்த நிதி மற்றும் கே.வி.அரங்கசாமி அளித்த நிதியுடன் அவருடைய
அக்காவின் வீட்டிலேயே ஒரு பகுதியை நிரந்தரக் குத்தகைக்கு எடுத்தோம். அப்பகுதியை
செப்பனிட்டு குளிர்சாதன வசதி செய்து, கட்டில் போன்றவை வாங்கி
அவரை குடியமர்த்தினோம்.
குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி என பிற பொருட்களை வாங்க பல்வேறு நண்பர்கள்
உதவினர். அவர் ஓர் இல்லத்திற்குச் சென்றதுமே அமைதியடைந்தார். அதன்பின்னர் தான்
கைவிடப்பட்டதைப் பற்றிய அகக்கொந்தளிப்பு உருவாகியது. முகநூலில் வசைகளை
எழுதத்தொடங்கினார்.
என்ன எல்லாவற்றையும் படித்தீர்களா?
இறந்து போன எழுத்தாளர்களை ஆதரவற்றவர்களாக, வறுமையில் வாடுபவர்களாக, சித்தரிப்பதில் ஆஜானுக்கு அப்படி ஒரு அலாதி இன்பம். அசோகமித்திரன் விஷயத்திலேயே கடுமையாக அனைவரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
ஆனாலும் அவர் திருந்துவதாக இல்லை. சர்க்கார் மாதிரி படத்துக்கு கதையை திருடி வஜனம் எழுதி இவர் வேண்டுமானால் கோடீஸ்வரராக கொழிக்கலாம். பி.எஸ்.என்.எல் பென்ஷன் வேறு. அதற்காக அடுத்தவரை மட்டம் தட்ட என்ன உரிமை இருக்கிறது?
வேறொன்றுமில்லை.
உடல், மூளை, ரத்தம், நாடி, நரம்பு, கிட்னி, லிவர் என அனைத்திலும் ஊறியுள்ள கொழுப்பு, திமிர், ஆணவம்.
இந்த மனிதனை சிறைக்கு அனுப்பினால் கூட நன்றாகத்தான் இருக்கும். இந்த பிரச்சினைக்காக இல்லையென்றால் கூட மத வெறியை தூண்டியதற்கான பல ஆதாரங்கள் இருப்பதால் அந்த அடிப்படையில் கூட செய்யலாம்.
ஹெச்.ராசா மாதிரியான ஆட்களே சுதந்திரமாக சுற்றும் போது ஆஜானை யார் கைது செய்வார்கள்!
ஆகவே எனதருமை தமிழ் எழுத்தாளர்களே, இலக்கியவாதிகளே, பதிப்பாளர்களே,
சேடிஸ்ட் ஜெயமோகன் உயிருடன் இருக்கும் வரை நீங்கள் யாரும் தயவு செய்து இறந்து போகாதீர்கள். பல்லைக் கடித்துக் கொண்டு உயிரோடு இறந்து விடாதீர்கள்.