Wednesday, October 8, 2025

இலக்கிய வாதிகளே இறக்காதீர், சேடிஸ்ட் ஜெமோ உயிருடன்

 


இலக்கிய உலகைச் சேர்ந்த யாராவது இறந்து விட்டால் புளிச்ச மாவு ஆஜானுக்கு சந்தோஷம் ஊற்றெடுத்து ஓடத் தொடங்கி விடும்.

தஞ்சை பிரகாஷ்,

ஃபிரான்ஸிஸ் கிருபா,

சுஜாதா

அசோகமித்திரன் 

ஆகியோரையெல்லாம் தன் அஞ்சலிக் குறிப்பால் அவர்களுக்கு மரணத்துக்கு பிந்தைய அவதூறு தண்டனை கொடுத்தார்.

அவரது இந்த பிரதாபம் குறித்து முன்பும் கூட சில பதிவுகள் எழுதியிருக்கிறென்.

நினைவுக்கு வந்த சிலவற்றின் இணைப்பு கீழே

அசோகமித்திரன் 1

அசோகமித்திரன் 2

அசோகமித்திரன் 3

க்ரியா பதிப்பகம் ராமகிருஷ்ணன்

பிரான்ஸிஸ் கிருபா

ஆஜானுடைய பார்வதிபுரத்தைச் சேர்ந்த பாட்டையா பாரதி மணி இறந்த போது மட்டும் ஆஜான் அஞ்சலி குறிப்பை எழுதவில்லை. அதன் காரணம் என்ன?

இந்த இணைப்பை பாருங்கள்.

ஆஜான் அஞ்சலி எழுதாதது ஏன்?


இதெல்லாம் பழைய கதை. 

சமீபத்தில் ஆஜானிடம் சிக்கியவர் ரமேஷ் பிரேதன்.

அவருக்கு நினைவஞ்சலி என்ற பெயரில் ஆஜான் எழுதியுள்ளதை படியுங்கள். 


சென்ற 2019 ல் ரமேஷ் என்னிடம் எனக்கு விஷ்ணுபுரம் அவார்டு குடுய்யாஎன்றார்.

 

இப்ப என்ன அப்டி அவசரம்? வாலிப வயசுதானே?” என்றேன்.

பணம் தேவை இருக்குஎன்றார்.

பணம்தானே? அத அனுப்பிடறோம்…” என்றேன். அந்தப் பணத்தை அனுப்பினோம்.

 

அதன்பின் மீண்டும் 2021 ல் அழைத்தார். இப்பயாச்சும் அவார்டு குடுய்யா. நான்லாம் கோவிட்ட தாண்டமாட்டேன்என்றார்.

 

உங்களுக்கெல்லாம் கல் மாதிரி ஆயுசுஅவார்டு முறையாத்தான் வரும்சின்னப்பசங்களுக்கு குடுக்கிற அவார்டு இல்ல இதுஎன்றேன்.

அதன்பின் அவ்வப்போது தன் ஆயுள் முடிவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் கோவிட் அதன்பின் வந்த ஒரு நெருக்கடிக்காலம் ஆகியவற்றை கடந்துவிட்டார். அவருக்கு விருதை  வரிசையை முந்திக்கொண்டு அறிவிப்பதே அவருடைய உடல்நிலை, ஆயுள் பற்றி நானும் ஐயப்படுகிறேன் என்று ஆகிவிடுமோ என்னும் குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஆகவே அவருடைய நிரந்தர ஐயத்தை வேடிக்கையாகவே கடந்துகொண்டிருந்தேன்.

 

இந்த முறை அவருக்கு இயல்பாகவே வரிசையில் இடம் அமைந்தது. அதை ஆகஸ்டில் அவரிடம் சொன்னேன். இப்பவே குடுத்திருடிசம்பரில் நான் இருக்கமாட்டேன்என்றார்.

 

நீங்க இருப்பீங்க….” என்றேன்.

 

மீண்டும் ஜூனில் அழைத்து செப்டெம்பரில் தூரன் விழாவோட சேத்தே நடத்திருஇருப்பேனான்னு தெரியலைஎன்றார்.

 

2011 ல் வெள்ளையானை நாவல் நண்பர் அலெக்ஸின் எழுத்து பிரசுர வெளியீடாக வந்தபோது அவர் புதுச்சேரியில் ஒரு மதிப்புரைக்கூட்டம் ஏற்பாடு செய்தார். அந்நிகழ்ச்சி முடிவில் மீண்டும் ரமேஷைச் சந்தித்தேன். மெலிந்து ஒடுங்கி அழுக்கு வேட்டியும் சட்டையுமாக இருந்தார்.

 

நல்லா இருக்கீங்களா?” என்று சம்பிரதாயமாகக் கேட்டேன்.

நல்லா இல்லைஎன்றார்.

 

நிகழ்ந்ததை அவர் சொன்னார். பிரேம், மாலதி இருவரும் அவரை கைவிட்டுவிட்டதாகவும், ஓராண்டுக்குமேல் ஒரு தோப்பில் காவலராக பணியாற்றியதாகவும், உடல்நிலை மோசமாக ஆனதனால் அவ்வேலையைச் செய்யமுடியாமல் அப்போது பாரதி நினைவில்லம் வராந்தாவில் வாழ்வதாகவும் சொன்னார். உறவினர்களிடம் செல்ல அவர் விரும்பவில்லை. உறவுகளை முன்னரே அவர் வெட்டிவிட்டிருந்தார். இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர் நண்பர்கள் உணவு வாங்கி அளித்து உதவிவருவதாகவும் பெரும்பாலும் நினைவில்லம் வருபவர்களிடம் கையேந்தி வாழ்வதாகவும் சொன்னார். பிச்சை எடுக்கிறேன் ஜெயமோகன்என்றார்.

 

நான் உணர்ச்சிவசப்பட்டு அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். நான் சாப்பிடுற வரை நீங்களும் சாப்பிடுவீங்க. நான் கூரைக்குக் கீழே இருக்கிற வரைக்கும் நீங்க தெருவிலே இருக்க மாட்டீங்கஎன்றேன்.

 

அன்றே அவரை ஒரு வாடகை அறையில் அலெக்ஸ் உதவியுடன் தங்கவைத்தேன். ஒரு வாரத்தில் மணி ரத்னம் அளித்த நிதி, என் சொந்த நிதி மற்றும் கே.வி.அரங்கசாமி அளித்த நிதியுடன் அவருடைய அக்காவின் வீட்டிலேயே ஒரு பகுதியை நிரந்தரக் குத்தகைக்கு எடுத்தோம். அப்பகுதியை செப்பனிட்டு குளிர்சாதன வசதி செய்து, கட்டில் போன்றவை வாங்கி அவரை குடியமர்த்தினோம்.

 

குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி என பிற பொருட்களை வாங்க பல்வேறு நண்பர்கள் உதவினர். அவர் ஓர் இல்லத்திற்குச் சென்றதுமே அமைதியடைந்தார். அதன்பின்னர் தான் கைவிடப்பட்டதைப் பற்றிய அகக்கொந்தளிப்பு உருவாகியது. முகநூலில் வசைகளை எழுதத்தொடங்கினார்.

என்ன எல்லாவற்றையும் படித்தீர்களா?

இறந்து போன எழுத்தாளர்களை ஆதரவற்றவர்களாக, வறுமையில் வாடுபவர்களாக, சித்தரிப்பதில் ஆஜானுக்கு அப்படி ஒரு அலாதி இன்பம். அசோகமித்திரன் விஷயத்திலேயே கடுமையாக அனைவரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

ஆனாலும் அவர் திருந்துவதாக இல்லை. சர்க்கார் மாதிரி படத்துக்கு கதையை திருடி வஜனம் எழுதி இவர் வேண்டுமானால் கோடீஸ்வரராக கொழிக்கலாம். பி.எஸ்.என்.எல் பென்ஷன் வேறு. அதற்காக அடுத்தவரை மட்டம் தட்ட என்ன உரிமை இருக்கிறது?

வேறொன்றுமில்லை.

உடல், மூளை, ரத்தம், நாடி, நரம்பு, கிட்னி, லிவர் என அனைத்திலும் ஊறியுள்ள கொழுப்பு, திமிர், ஆணவம்.

இந்த மனிதனை சிறைக்கு அனுப்பினால் கூட நன்றாகத்தான் இருக்கும். இந்த பிரச்சினைக்காக இல்லையென்றால் கூட மத வெறியை தூண்டியதற்கான பல ஆதாரங்கள் இருப்பதால் அந்த அடிப்படையில் கூட செய்யலாம். 

ஹெச்.ராசா மாதிரியான ஆட்களே சுதந்திரமாக சுற்றும் போது ஆஜானை யார் கைது செய்வார்கள்!

ஆகவே எனதருமை தமிழ் எழுத்தாளர்களே, இலக்கியவாதிகளே, பதிப்பாளர்களே,

சேடிஸ்ட் ஜெயமோகன் உயிருடன் இருக்கும் வரை நீங்கள் யாரும் தயவு செய்து இறந்து போகாதீர்கள். பல்லைக் கடித்துக் கொண்டு உயிரோடு இறந்து விடாதீர்கள். 


Tuesday, October 7, 2025

நெசமா கோபமா மோடி?

 


நேற்று உச்ச நீதிமன்றத்தில் கேவலமான நிகழ்வு ஒன்று நடந்தது.  ராகேஷ் கிஷோர் என்றொரு வக்கீல் தலைமை நீதிபதி திரு கவாய் மீது காலணியை எரிந்துள்ளான்.

சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று சத்தம் போட்டுக் கொண்டே அந்த கேவலமான வேலையை செய்துள்ளான். 

கஜராஹூவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தலையில்லாத விஷ்ணு சிலையை சீரமைக்க வேண்டும்  என்ற வழக்கை தள்ளுபடி செய்கையில் " நீங்கள் ஏன் விஷ்ணுவிடமே வேண்டிக் கொள்ளக் கூடாது" என்று சொன்னமைக்காகத்தான் இந்த கேவலத்தை நிகழ்த்தியுள்ளான்.

தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் மாற்றங்களை ஏன் செய்ய முடியாது என்று தனி பதிவாக எழுதுகிறேன்.

நீதித்துறையின் உச்ச பொறுப்பில் உள்ளவரை இழிவு படுத்தும் தைரியம் எங்கிருந்து வருகிறது?

சனாதனம்தான்.

நீதிபதி கவாய் அவர்களின் சமூகப் பின்னணி காரணமாக அவரை சங்கிகள் பார்க்கும் பார்வை மோசமாகத்தான் இருக்கிறது.  அந்த பார்வையை தருவது சனாதனம்தான்.  

இந்த நிகழ்வுக்காக இந்தியர்கள் அனைவரும் கோபமடைந்துள்ளார்கள் என்று மோடி முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.


உண்மையாகவே இந்தியாவை நேசிக்கிற, அரசியல் சாசனத்தின் விழுமியங்களை மதிக்கிற இந்தியர்கள் இச்சம்பவம் குறித்து கோபமடைந்துள்ளனர்.

ஆனால் கண்டிப்பாக சங்கிகள் கிடையாது. 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சில சங்கிகளின் அரிய, உயரிய கருத்துக்கள் இங்கே . . .



இப்போ சொல்லுங்க மோடி, நெசமாவே உங்களுக்கு கோபமா? மனசுக்குள்ள சந்தோஷமாத்தானே இருந்தது.

நெசத்தை சொல்லுங்க . . .

Monday, October 6, 2025

கரூர் மரணங்களும் காமராஜரும்

 


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின்    முகநூல் பக்கத்தில்தான் கீழேயுள்ள காணொளியை பார்த்தேன்.


திரு நெல்லை கண்ணன் அவர்கள் இறந்து பல வருடங்கள் ஆகி விட்டதால் விஜய் கூட்டத்தின் கொடுமைகளுக்காக பேசியதாக இருக்க வாய்ப்பில்லை. இதை இங்கே சொல்வதற்கான காரணமே விஜய் ரசிகர்களின் அறிவுத்தரம்தான்.

இந்த காணொளியிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது. பிரச்சினை என்றால் தொண்டர்களை சிக்க வைத்து விட்டு தலைவர்கள் தப்பிப்பது ஈன்பது அந்தக் காலத்திலும் நடந்துள்ளது. 

Sunday, October 5, 2025

என்ன மிரட்டறியா லச்சூ?

 


கரூர் நெரிசல் மரணங்கள் தொடர்பாக இலக்கியவாதிகள், செயற்பாட்டாளர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையால் நொந்து போன புளிச்சமாவு ஜெமோ குண்டர் படை தளபதி, அற்ப சங்கி, போதைக்கவி லச்சுமி மணிவண்ணனில் அசிடிட்டி பிரச்சினை தீரவில்லை.

அடுத்து ஒரு பதிவு போட்டுள்ளார்.

கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட எல்லோரும் அரை நக்ஸல்கள், தேசத் துரோகிகள் என்றெல்லாம் திட்டி தீர்த்து விட்டு மோடியின் என்.ஐ.ஏ அவர்கள் அனைவர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை செய்துள்ளார்.



இப்படித்தான் எழுத்தாளர் பா.ஜெயபிரகாசம் அவர்களை புமா ஜெமோ அவதூறு செய்த போது அதைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்ட போது ஜெமோவும் அப்படித்தான் மிரட்டினார். அவரை யாரெல்லாம் புளிச்ச மாவு என்று எழுதுபவர்களில் மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் நிர்வாகத்திற்கு புகார் செய்து வேலையை காலி செய்யப் போவதாக மிரட்டினார்.

நான் கூட என்னை எங்கள் நிர்வாகம் விளக்கக் கடிதம் கேட்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் எனக்கு மிகவும் ஏமாற்றமாகி விட்டது.

அய்யா லச்சு, உங்க ஆஜானாலாயே ஒன்னும் கிழிக்க முடியலை, நீ எம்மாத்திரம்!!!

பல்டி ஏன் ஆட்டுக்காரா?

 


போன ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் விஜய்க்கு ஆதரவாக பேசி, மோடி "பொறுக்கி" எடுத்த எம்.பி க்கள் குழுவிடம் விஜய் சார்பாக தப்பு தப்பாக தமிழாக்கம் செய்த ஆட்டுக்காரன் நேற்று உதிர்த்த முத்து கீழே . .


ஆட்டுக்காரனை இந்த அளவு நொந்து போக வைத்தது யார்? அப்போ சங்கிகள் எதிர்பார்க்கும் பாஜக-அதிமுக-தவெக கூட்டணி கிடையாதா?

ஏன் இந்த பல்டி ஆட்டுக்காரன்?

தினேஷன் வான்ட்ஸ் டு நோ

(ஆர்ணாப் கோஸ்வாமி ஸ்டைலில் படிக்கவும்} 

Saturday, October 4, 2025

இப்போ அதென்ன சொர்க்கமா ட்ரம்பு?

 


ஆஸ்கார் அமைதி விருதுக்கான கனவுப் போட்டியில், ஓ சாரி நோபல் அமைதி விருது வாங்க மோடியோடு துவந்த யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் டொனால்ட் டரம்பு ஹமாஸ் இயக்கத்திற்கு கெடு விதித்துள்ளார். 

அவர் முன்மொழிந்த காஸா அமைதித் திட்டத்தை அவர் சொன்ன காலக்கெடுவிற்குள் ஹமாஸ் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்களுக்கு தான் நரகத்தை காண்பிக்கப் போவதாக ட்ரம்பு மிரட்டியுள்ளார்.

ஆமாம், ட்ரம்பு, இப்போ காஸாவில எல்லோரும் சொர்க்கத்திலியா வாழ்ந்து கிட்டு இருக்காங்க?

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் பெண்களையும் குழந்தைகளையும் மருத்துவமனைகளையும் குறி வைத்து நடந்து காஸா முழுதுமே இடிபாடுகளாக மாறியுள்ளது.  பசியும் பட்டினியும் நோயும் காயங்களும் சடலங்களும் என ஏற்கனவே காஸா நரகமாகத்தான் இருக்கிறது.

இதிலே புதிதாக எந்த நரகத்தை காண்பிக்கப்ப் போகிறாய்?

பிகு: காலையில் செய்தித்தாளை பார்த்து எழுதிய பதிவு இது. வேறு வேலைகள் காரணமாக உடனடியாக பதிவிட முடியவில்லை. இப்போது பார்த்தால் நிலைமை மாறியுள்ளது. அது பற்றி விரிவாக இன்றோ, நாளையோ எழுதுகிறேன்.

Friday, October 3, 2025

இந்தியாவிலேயே மானகெட்ட கட்சி எது?

 


விளக்கம் ஏதும் தேவையில்லை. கீழேயுள்ள செய்தியே போதும். விஜய்யின் கட்சி இப்படி பாஜகவிற்கே மானங்கெட்ட, பொறுப்பற்ற, மோசமான கட்சி என்று பெயரெடுக்க போட்டி போட்டு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை.


பிகு: நான் கூட ஒரு தொழிற்சங்கத்தில் கோட்ட அளவில் 25 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக செயல்பட்டேன். இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் பேசியிருந்தால் எங்கள் தோழர்கள் அந்த நிமிடத்திலேயே என்னை அந்த பொறுப்பிலிருந்து நீக்கியிருப்பார்கள். 

கரூர் கூட்டறிக்கை - உனக்கேன் நோகுது லச்சூ?

 


கரூர் நெரிசல் மரணங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக விஜய், பாஜக, அதிமுக செய்து வரும் அரசியல் தொடர்பாக பல்வேறு கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். பலரும் அதில் இணைந்து கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து ஓடிப் போன விஜய் மூன்று நாட்களுக்குப் பின்பு வெளியிட்ட காணொளி திமிரின் உச்சகட்டம். அவர் மீதான எரிச்சலை அது அதிகப்படுத்தியது. நிர்மலா அம்மையார் மற்றும் ஹேமாமாலினி குழு வந்து போனது கொடுத்த தைரியம்தான் விஜயின் ஆணவத்தின் பின்னே இருக்கிறது. 

அதைத்தான் இந்த அறிக்கை சொல்கிறது. 

அந்த அறிக்கை புளிச்ச மாவு ஆஜானின் குண்டர் படை தளபதி, போதைக் கவி லட்சுமி மணிவண்ணனுக்கு மிளகாயை கடித்தது போல பதற வைத்து விட்டது. அந்தாள் ஒரு பதிவு போட்டுள்ளார். 



போதைக்கவி லச்சூவிற்கு சிலவற்றை சொல்ல வேண்டும்.

முதலில் இந்த அறிக்கை ஒரு பக்க சார்பல்ல, உண்மையின் சார்பானது.

இதிலே கையெழுத்திட்டவர்களின் அடையாளம் எழுத்தாளர்கள் என்பதுதான். அவர்கள் அந்த அடையாளத்தை பயன்படுத்தாமல் உனக்கு இருக்கிற ஜெயமோகனின் அல்லக்கை, போதையில் உழல்பவன் என்ற அடையாளத்தையா பயன்படுத்துவார்கள்?

அவர்கள் எழுத்தாளர் என்ற அடையாளத்தை பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல நீ யார்?

நீ வேண்டுமானால் சங்கி எழுத்தாளர்கள் சார்பில் அந்த கொலை காரனுக்கு ஆதரவாக ஒரு கூட்டறிக்கை வெளியிடு.

இறுதியாக ஒரு வார்த்தை.

போதை அதிகமானால் போய் படுத்துக் கொள், இப்படி கருத்து சொல்ல வராதே . . .


கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக

கலை இலக்கியவாதிகள், சமூகச்செயற்பாட்டாளர்கள் 2.10.2025 அன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கை
**
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய “சாலையில் காட்சிதரும் - ரோடு ஷோ” நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைக் காணச்சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றாம்.

விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம்.

கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள்.

விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச்சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் “சதி” கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல.

தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டுநாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது.

கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன.

எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம்.

விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
- சமூக அக்கறையுடன்,
கி.சந்துரு, ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
ஆர்.பாலகிருஷ்ணன், சிந்துவெளி ஆய்வாளர்
எம்.ஜி.தேவசகாயம், இ.ஆ.ப. (ஓய்வு)
எஸ்.வி.ராஜதுரை, எழுத்தாளர்
‘தி இந்து’ என்.ராம், ஊடகவியலாளர்
ஹென்றி டிபேன், வழக்குரைஞர்
ட்ராட்ஸ்கி மருது, ஓவியர்
து.ரவிக்குமார், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
சல்மா, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்
வண்ணதாசன், எழுத்தாளர்
பொன்னீலன், எழுத்தாளர்
கவிஞர் கலாப்ரியா
எழுத்தாளர் பாமா
ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்
பெருமாள் முருகன், எழுத்தாளர்
சுப்ரபாரதிமணியன், எழுத்தாளர்
இமையம், எழுத்தாளர்
அழகிய பெரியவன், எழுத்தாளர்
ராஜசங்கீதன், எழுத்தாளர்
கவிஞர் அறிவுமதி, பாடலாசிரியர்
கவிஞர் பழனிபாரதி, பாடலாசிரியர்
கவிஞர் யுகபாரதி, பாடலாசிரியர்
கவிஞர் சுகிர்தராணி
கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
கவிஞர் குட்டி ரேவதி
கவிஞர் சக்திஜோதி
கவிஞர் ரத்திகா
கவிஞர் பா.மகாலஷ்மி
கவிஞர் வெய்யில்
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்
கவிஞர் யாழன் ஆதி
கவிஞர் ஷங்கர்ராமசுப்பிரமணியன்
கவிஞர் முத்துவேல்
கவிஞர் செல்மா பிரியதர்ஷன்
கவிஞர் லிபி ஆரண்யா
கவிஞர் சைதை ஜெ
கவிஞர் மதிவண்ணன்
கவிஞர் கரிகாலன்
கவிஞர் கண்டராதித்தன்
கவிஞர் கண்மணி ராஜா முஹம்மது
கவிஞர் ஜோசப் ராஜா
கவிஞர் நறுமுகை தேவி
கவிஞர் தங்கம் மூர்த்தி
கவிஞர் பாரதிவாசன்
கவிஞர் மைதிலி நிதர்சனா
கவிஞர் தேவசீமா
கவிஞர் உமா சக்தி
கவிஞர் வெண்புறா சரவணன்
கவிஞர் அமிர்தம் சூர்யா
கவிஞர் தமிழ் மணவாளன்
கவிஞர் க மோகனரங்கன்
கவிஞர் ஜெனிஃபர்
கவிஞர் மரக்கா
கவிஞர் பொன்முகலி
கவிஞர் நெல்லை ஜெயந்தா
கவிஞர் சந்திரா தங்கராஜ்
கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி
கவிஞர் சுஜாதா செல்வராஜ்
கவிஞர் கண்மணி ராசா
கவிஞர் தமிழ்ப்பித்தன்
கவிஞர் முருக தீட்சண்யா
கவிஞர் இரா.தெ.முத்து
கவிஞர் பாபு சசிதரன்
கவிஞர் ஆனைமங்கலம் கணபதி குணசேகரன்
அ.வெண்ணிலா, எழுத்தாளர்
க.உதயசங்கர், எழுத்தாளர்
தேனி சீருடையான், எழுத்தாளர்
பவா செல்லதுரை, எழுத்தாளர்
யூமா வாசுகி, எழுத்தாளர்
ம.காமுத்துரை, எழுத்தாளர்
ராஜன் குறை, எழுத்தாளர்
இரா.முருகவேள், எழுத்தாளர்
புலியூர் முருகேசன், எழுத்தாளர்
யெஸ்.பாலபாரதி, எழுத்தாளர்
மதிக்கண்ணன், எழுத்தாளர்
சாம்ராஜ், எழுத்தாளர்
சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர்
அரிசங்கர், எழுத்தாளர்
நட.சிவகுமார், எழுத்தாளர்
மு.ஹரிகிருஷ்ணன், எழுத்தாளர்
வீ.எம்.எஸ்.சுபகுணராஜன், எழுத்தாளர்
மு.அப்பணசாமி, எழுத்தாளர்
நா.முத்துநிலவன், எழுத்தாளர்
என். ஸ்ரீராம், எழுத்தாளர்
விழியன், எழுத்தாளர்
கோவை சதாசிவம், எழுத்தாளர்
மு.ஆனந்தன், எழுத்தாளர்
தி. பரமேசுவரி, எழுத்தாளர்
கரன் கார்க்கி, எழுத்தாளர்
கருப்பு அன்பரசன், எழுத்தாளர்
கே.என்.செந்தில், எழுத்தாளர்
அ.முத்துகிருஷ்ணன், எழுத்தாளர்
ஜமாலன், எழுத்தாளர்
தீபலட்சுமி, எழுத்தாளர்
சாரோன், எழுத்தாளர்
மீரான் மைதீன், எழுத்தாளர்
நந்தவனம் சந்திரசேகரன், எழுத்தாளர்
வே.கி. அமிர்தராஜ், சின்னத்திரை எழுத்தாளர்
முத்து செல்வன், சின்னத்திரை எழுத்தாளர்
அழகு நிலா பொன்னீலன், எழுத்தாளர்
கலைக்கோவன், எழுத்தாளர்
பார்த்தசாரதி எழுத்தாளர்
பேரா அரங்க மல்லிகா, எழுத்தாளர்
எழுத்தாளர் அம்பை
அ ச சேரிவாணன், எழுத்தாளர்
மாதவன் சுப்ரமணியன், எழுத்தாளர்
ஞா சத்தீஸ்வரன், எழுத்தாளர்
அவை நாயகன் எழுத்தாளர்
புதிய மாதவி, எழுத்தாளர்
அஜயன் பாலா, எழுத்தாளர்
புது எழுத்து மனோன்மணி, எழுத்தாளர்
நாராயணி கண்ணகி, எழுத்தாளர்
எழுத்தாளர் நீதிமணி, எழுத்தாளர்
சுபஸ்ரீ தேசிகன், அறிவியல் எழுத்தாளர்
தமிழ் மகன், எழுத்தாளர்
அ.கரீம், எழுத்தாளர்
துளசி பாக்யவதி, எழுத்தாளர்
தமயந்தி, எழுத்தாளர்
சீராளன் ஜெயந்தன், எழுத்தாளர்
மாதவன் சுப்ரமணியன், எழுத்தாளர்
மு குலசேகரன், எழுத்தாளர்
லட்சுமிகாந்தன், எழுத்தாளர்
முத்துக்கந்தன் , எழுத்தாளர்
விளாத்திகுளம் அன்பழகன், எழுத்தாளர்
மீனா சுந்தர், எழுத்தாளர்
எழுத்தாளர் ஹேமலதா
நா கோகிலன், எழுத்தாளர்
ஜி குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர்
கமலாலயன், மொழிபெயர்ப்பாளர்
குறிஞ்சிவேலன், மொழிபெயர்ப்பாளர்
அசதா, மொழிபெயர்ப்பாளர்
ஞானராஜசேகரன், திரைப்பட இயக்குநர்
ரோஹினி, திரைக்கலைஞர்
கவிதாபாரதி, திரைப்பட இயக்குநர்
ஆர்.ஆர்.சீனிவாசன், ஆவணப்பட இயக்குநர்
லெனின் பாரதி, திரைப்பட இயக்குநர்
அதியன் ஆதிரை, திரைப்பட இயக்குநர்
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, திரைப்பட இயக்குநர்
கௌதம் ராஜ், திரைப்பட இயக்குநர்
ராஜூமுருகன், திரைப்பட இயக்குநர்
பாரதி கிருஷ்ணகுமார், ஆவணப்பட இயக்குநர்
மீரா கதிரவன், திரைப்பட இயக்குநர்
எழில் பெரியவேடி, திரைப்பட இயக்குநர்
குணசுந்தரி, குறும்பட இயக்குநர்
பேரா.வி.அரசு, ஆய்வாளர்
வ.கீதா, ஆய்வாளர்
ஸ்டாலின் ராஜாங்கம், ஆய்வாளர்
அ.ஜெகநாதன், ஆய்வாளர்
ந.முருகேசபாண்டியன், ஆய்வாளர்
பேரா கே.ஜோதி சிவஞானம்
பேரா. அ.ராமசாமி, ஆய்வாளர்
பேரா ஸ்ரீ.ரவீந்திரன், அசோகா பல்கலைக்கழகம், ஹரியானா
மு.ராமசாமி, நாடகவியலாளர்
பிரளயன், நாடகவியலாளர்
அ.மங்கை, நாடகவியலாளர்
சுதா ராமலிங்கம், வழக்கறிஞர்
சுகி சிவம், சொற்பொழிவாளர்
கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
கு.ராமகிருட்டிணன், தலைவர், பெரியார் திராவிடர் கழகம்
அ.அருள்மொழி, பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்
பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
பேரா. ஹாஜா கனி, பொதுச்செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
பேரா. சுப. வீரபாண்டியன், தலைவர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை
பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை
நாகை திருவள்ளுவன், தமிழ்ப்புலிகள் கட்சி
து.சேகர் அண்ணாதுரை, மாநிலச்செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
கு.ஜக்கையன், தலைவர், ஆதித்தமிழர் கட்சி
தமீமுல் அன்சாரி நிஜாமி, தேசிய செயலாளர் இந்திய சோசியலிஸ்ட் பார்ட்டி
சிவகுமார் சங்கரலிங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க்கம்
ஆ.பிரகாஷ் குமார், சமூகச் செயல்பட்டாளர்
அ. தேவநேயன் சமூகச் செயல்பாட்டாளர்
சுபேர், அரசியல் விமர்சகர்
செந்தில்குமார், இலக்கியச் செயல்பாட்டாளர்
கார்த்திக், இலக்கியச் செயல்பாட்டாளர்
பேரா. செ.ஆதிரை, ஆய்வாளர்
மதுக்கூர் ராமலிங்கம், தலைவர், தமுஎகச
சுதீர் செந்தில், ஆசிரியர், உயிர் எழுத்து
டி.பாலாஜி, தமிழ் முழக்கம்
ஆர்.விஜயசங்கர், ஊடகவியலாளர்
ஆர்.கே ராதாகிருஷ்ணன், ஊடகவியலாளர்
‘நக்கீரன்’ கோபால், ஊடகவியலாளர்
மருதையன், இடதுசாரி செயற்பாட்டாளர்
ஹசீப் முகமது, ஊடகவியலாளர்
ஜெயராணி, ஊடகவியலாளர்
பாரதி தம்பி, ஊடகவியலாளர்
சுகுணா திவாகர், ஊடகவியலாளர்
பி.ஆர்.அரவிந்தாக்ஷன், ஊடகவியலாளர்
மயிலை பாலு, ஊடகவியலாளர்
வாசுகி லட்சுமணன், ஊடகவியலாளர்
கவின்மலர், ஊடகவியலாளர்
பிரிப்ஸ் என்னாரெசு, ஊடகவியலாளர்
செந்தில்வேல், ஊடகவியலாளர்
முரளி கிருஷ்ணன் சின்னதுரை, ஊடகவியலாளர்
சமரன் நாகன், ஊடகவியலாளர்
அருள் எழிலன், ஊடகவியலாளர்
மைனர் வீரமணி, ஊடகவியலாளர்
ஜீவ சகாப்தன் ஊடகவியலாளர்
கரிகாலன், ஊடகவியலாளர்
அரவிந்த் சதீஷ் செல்லதுரை, ஊடகவியலாளர்
விக்னேஷ், ஊடகவியலாளர்
பா ஜீவசுந்தரி, ஊடகவியலாளர்
அ.குமரேசன், ஊடகவியலாளர்
ஆ பீர்முகமது, ஊடகவியலாளர்
வாலாசா வல்லவன், ஆசிரியர், புதிய சிந்தனையாளன்
வாசுகி பாஸ்கர், நீலம்
கண.குறிஞ்சி, ஆசிரியர், புதுமலர்
டாக்டர் கோ.ஒளிவண்ணன், எழுத்தாளர், பதிப்பாளர்
நிழல் திருநாவுக்கரசு, பதிப்பாளர்
இஷாக், பதிப்பாளர்
அனுஷ், எதிர் வெளியீடு
அருண் பிரசாத், பதிப்பாசிரியர்
சிவசெந்தில்நாதன், பதிப்பாளர்
கருப்புப்பிரதிகள் நீலகண்டன்
ஓவியர் ராஜசேகரன்
ஓவியர் சந்தோஷ் நடராஜன்
ஓவியர் சரண்ராஜ்
ஓவியர் நிதர்சனா
மகிழினி மணிமாறன், புத்தர் கலைக்குழு
நர்த்தகி நடராஜ், நாட்டியக்கலைஞர்
ஆர் ஷாஜகான் , செயற்பாட்டாளர்
பேராசிரியர் ப சிவக்குமார், சமூகச் செயற்பாட்டாளர்
டிஸ்கவரி வேடியப்பன், பதிப்பாளர்
நிறங்கள் சிவா , சமூகச் செயற்பாட்டாளர்
பேராசிரியர் இரா காமராசு
செம்மலர் செல்வி , சமூகச் செயற்பாட்டாளர்
சரிதா ஜோ, எழுத்தாளர்
கவிஞர் சுவாதி சா.முகில்
சரிதா ஜோ, எழுத்தாளர்
பி எஸ் கீதா, சமூகச் செயற்பாட்டாளர்
சந்துரு மாயவன், ஆய்வாளர்
கே.சுகந்தி, நாட்டுப்புற திரை இசைப் பாடகர்
கவிதா கஜேந்திரன், செயற்பாட்டாளர்
கிருத்திகா தரன் , செயற்பாட்டாளர்
சாரதா தேவி , செயற்பாட்டாளர்
ரமேஷ்பாபு, செயற்பாட்டாளர்
கவிஞர் இராதமிழரசி
கவிஞர் பூங்கொடி பாலமுருகன், சிறார் எழுத்தாளர்
கவிஞர் இளையவன்சிவா
கவிஞர் மு கீதா
ஞா கலையரசி, சிறார் எழுத்தாளர்
புவனாசந்திரசேகரன், சிறார் எழுத்தாளர்
அப்பு சிவா, சிறார் எழுத்தாளர்
கவிஞர் பாரி கபிலன்
எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன்
சுரேஷ் காத்தான், செயற்பாட்டாளர்
எழுத்தாளர் அமுதாஆர்த்தி
கவிஞர் பிரியம்வதா
எழுத்தாளர் மதியழகன் சுப்பையா
மதுரை சரவணன், குழந்தைகள் செயல்பாட்டாளர்
கவிஞர் அம்பிகா குமரன்
காஸ்ட்லெஸ் தீவி
எழுத்தாளர் பிரேமா சந்துரு
எழுத்தாளர் நக்கீரன்
ச.பாலமுருகன், எழுத்தாளர்
ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்
கவிதா பாரதி
இயக்குநர்
கவிஞர் சோலை மாயவன்
கவிஞர் மௌனன் யாத்ரிகா
கவிஞர் பிருந்தா சேது
புதுவை சீனு தமிழ்மணி
முனைவர் பா இரவிக்குமார்
புதுவை சித்தன் ஜெயமூர்த்தி
நெய்தல் கிருஷ்ணன்
கவிஞர் புன்னகை செ. ரமேஷ்குமார்
கவிஞர் முல்லை விஜயன்
ஜெயா சிங்காரவேலு
சிறார் எழுத்தாளர்
சாலை செல்வம்
சிறார் எழுத்தாளர்
புதுவை சித்தன் ஜெயமூர்த்தி
திரை இசை, மக்கள் இசைப் பாடகர்
கவிஞர் புனித ஜோதி
பேரா அரச முருகு பாண்டியன்
வெளி ரங்கராஜன் நாடகவியலாளர்
கவிஞர் ஆண்டன் பெனி
முனைவர் நா இளங்கோ
கவிஞர் இரா கலியமூர்த்தி
திருஞானசம்பந்தம் ,பெங்களூரு
பேரா லெனின்
கவிஞர் எம் எம் பைசல்
கவிஞர் வீ வைகை சுரேஷ்
முனைவர் ஆ பிரபு
எழுத்தாளர் தமயந்தி
திரைப்பட இயக்குநர்
வழக்குரைஞர் பி எஸ் அஜிதா
கவிஞர் வத்ஸலா
கவிஞர் ச விஜயலட்சுமி
கவிஞர் அருள்ஜோதி முரளிதரன்
பௌஜி ஜுவல்
அரங்க செயற்பாட்டாளர்
எழுத்தாளர் பாமரன்
கீதா நாராயணன்
சமூகச் செயற்பாட்டாளர்
பேரா சோ மோகனா
எழுத்தாளர் ஈ ரா மணிகண்டன்
கவிஞர் ஐயப்ப மாதவன்
மு தமிழரசன்
முனைவர் உ சுப்பிரமணியன்
கவிஞர் பி கே சிவகுமார்
சோலை சீனிவாசன்
லெ முத்துராமலிங்கம் சமூகச் செயற்பாட்டாளர்
எழுத்தாகர் ஈரோடு சர்மிளா
எழுத்தாளர் செ ஆடலரசன்
பேரா ஜானகி ராஜா
கீதா மதிவாணன் எழுத்தாளர்,
இரா. பிரபாகரன்
ஆசிரியர்,
பொது நலன் விரும்பி,
கவிசித்தன். முனைவர். ASM. முனியாண்டி .
கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர்,
படைப்பாளி பைரவி
புதுச்சேரி. தமுஎகச நகரக்கிளை துணைத்தலைவார்,
கவிஞர்.வைகறையான்,
கலைஇலக்கிய அணி திருப்பாலை பகுதி குரு.பிச்சை,
ரா.சிவக்குமார்,
கவிஞர் ஊர்சுலா ராகவ்
பதிப்பாளர் வண்ணை சிவா
பேரா சி அ வ இளஞ்செழியன்
செங்கை கவிஞர் ஆக்கி.
(இந்தக் கூட்டறிக்கையில் இணையவிரும்பும் அன்பர்கள், இவ்வறிக்கையை தமது சமூக ஊடகப் பக்கங்களில் தமது பெயரையும் இணைத்துப் பகிரவும். இங்கும் தமது பெயரை பின்னூட்டத்தில் இடவும். )

Thursday, October 2, 2025

எல்.ஐ.சி யின் கம்ப்யூட்டர் துர்கா

 


 நான் எழுதிய "முற்றுகை" நாவலின் முக்கியமான அத்தியாயம் கீழே உள்ளது.  அறுபதுகளின் இறுதியில்  இயந்திரமயமாக்கலுக்கு எதிராக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய "இலாகோ முற்றுகை" போராட்டம் சங்கத்தின் வரலாற்றில் ஒரு வெற்றி அத்தியாயம். அப்போராட்டத்தின் மிக முக்கியமான ஒரு கட்டம்தான் கீழே உள்ளது. 

முதலில் உள்ள படம் "முற்றுகை" நூலின் அட்டைப்படம்.  அதில் உள்ளதுதான் "இலாகோ" கட்டிடத்தின் இன்றைய நிலை. அடுத்த படத்தில் உள்ள நுழைவாயிலில்தான் "துர்கா பூஜை" கொண்டாடப் பட்டது. 

மேற்கு வங்கத்தின் துர்கா பூஜை இன்று நிறைவடையும் நாளான இன்று அந்த அத்தியாயத்தை பகிர்ந்து கொள்கிறேன். 






“இலாகோ முற்றுகை” யை உடைப்பதற்கான சரியான தருணம் வந்துள்ளதாக நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்து சேர்ந்தது. துர்கா பூஜை தொடங்கி இருந்தது. பெங்காலிகளின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகை துர்கா பூஜை. காளிகத் காளி, தக்னேஷ்வர் துர்கா போன்றவர்களை பிரதான கடவுளாக வழிபடுபவர்களுக்கு துர்கா பூஜைதான் பிரதானமான பண்டிகை. அந்தந்த பகுதிகளில் பந்தல் அமைத்து களி மண்ணால் உருவாக்கப்பட்ட துர்கை சிலைகளுக்கு வண்ணம் பூசி பத்து நாட்கள் பூஜை நடத்தி பிறகு கங்கையில் கரைப்பார்கள். ஏழை, பணக்காரன் வித்தியாசம் மட்டுமல்ல, மத வேறுபாடும் இல்லாமல் அனைவரும் கொண்டாடும் திருவிழாவும் கூட.

 என்னதான் போராட்டம் என்றாலும் துர்கா பூஜாவை குடும்பத்தோடு கொண்டாடத்தான் ஊழியர்கள் விரும்புவார்கள். அதனால் இந்த சமயத்தில் முற்றுகைக்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே சரியான தருணம் பார்த்து கம்ப்யூட்டரை வில்லியம்ஸ் கோட்டையிலிருந்து வெளியே கொண்டு வந்து இலாகோ கட்டிடத்திற்குள் எடுத்துச் சென்று விடுவோம் என்பதுதான் அந்த திட்டம்.

 உண்மையிலேயே இது தீவிரமான பிரச்சினைதான். ஊழியர்களுடைய உணர்வுகளையும் புறக்கணிக்க முடியாது. அதே சமயம் இத்தனை நாள் உறுதியாக இருந்து விட்டு பிரச்சினை உச்சகட்டத்தை நெருங்கிய நிலையில் அதை கோட்டை விட்டு விடவும் முடியாது.

 என்ன செய்வது?

 ஏதாவது செய்தாக வேண்டுமே!

 முதல் வருடம் கால்டெக்ஸ் கம்பெனியில் நடந்த சம்பவம் வேறு நினைவில் வந்து கொண்டே இருந்தது.

 கால்டெக்ஸ் ஒரு பன்னாட்டு எண்ணெய் நிறுவனம். அங்கே ஊதிய உயர்வுக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதற்கான அறைகூவல் கொடுத்திருந்தார்கள்.

 அப்போது துர்கா பூஜைக் காலமும் வந்தது. பண்டிக்கைக்கான நான்கு நாட்கள் விடுமுறை அளித்திருந்தார்கள். விடுமுறை முடிந்து அலுவலகம் வந்த ஊழியர்கள் தங்கள் வாழ்நாளில் காணாத அதிர்ச்சிக்கு உள்ளாகினார்கள்.

 ஆம்

 அவர்களின் அலுவகத்தைக் காணவில்லை.

 விடுமுறைக் காலத்தில் கால்டெக்ஸ் நிர்வாகம் தங்கள் அலுவலகத்தை சுத்தமாக காலி செய்து கொண்டு பம்பாய்க்கு போயிருந்தார்கள். மேலாளர் அறைகள், ஊழியர்களின் இருக்கைகள் என எல்லாவற்றையுமே எடுத்துப் போயிருந்தார்கள். ஊழியர்கள் தங்கள் வேலைகளை மட்டுமல்ல, தாங்கள் பணியாற்றிய மேஜையில் வைத்திருந்த சொந்த உடமைகளைக் கூட இழந்திருந்தார்கள்.

 கால்டெக்ஸ் நிலைமை நிச்சயமாக இங்கே வரக்கூடாது.

 அதற்கு?  

 போராட்டமும் தொடர வேண்டும். ஊழியர்களின் பண்டிகைக் கொண்டாட்டமும் நடைபெற வேண்டும்.

 பரேஷ்பாபு ஒரு அருமையான யோசனையைச் சொன்னார்.

 “நாம் ஏன் இங்கேயே துர்கா பூஜாவை கொண்டாடக் கூடாது?”

 “ஒரு தொழிற்சங்கம் இது போல ஒரு மதத்தின் பண்டிகையை கொண்டாடுவது முறையாக இருக்குமா?”

 என்ற கேள்வியும் உடன் வந்தது.

 விவாதம் நடந்தது. மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை மதத்தின் பண்டிகை என்பதைக் கடந்து மக்களின் பண்டிகையாக மாறி விட்டது. துர்கா பூஜை பந்தல்களுக்கு அனைத்து மதத்தினரும் வருவதும் காணிக்கை செலுத்துவதும் நடைமுறையாகவே மாறி விட்டது. அதனால் இங்கே துர்கா பூஜையைக் கொண்டாடுவதில் தவறில்லை. அதே நேரம் இலாகோ கட்டிடத்தின் பின் வாயில் வழியாகத்தான் கம்ப்யூட்டரை உள்ளே கொண்டு செல்ல முடியும். அந்த இடத்தில் நாம் துர்கா சிலையை வைத்து விட்டால் அதனை அகற்றி விட்டு கம்ப்யூட்டரை எடுத்துச் செல்லும் தைரியமும் நிர்வாகத்திற்கு வராது. அப்படி நிர்வாகம் முரட்டுத்தனமாக யோசித்தாலும் பிரச்சினை வரும் என்பதால் ஆளுனர் பயப்படுவார். அதனால் நாம் இங்கே துர்கா பூஜை கொண்டாடுகிறோம் என்று சரோஜ்தா அறிவித்தார்.

 முடிவெடுத்தாகி விட்டது. துர்காதேவியின் சிலைக்கு எங்கே செல்வது? சிலை வாங்க பணம் வேண்டுமே! போராட்டப் பந்தலில் இருப்பவர்களிடமே வசூல் செய்யப்பட்டது. இரண்டாயிரம் ரூபாய் உடனடியாக வசூலானது. யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளை வருமான வரித்துறை விசாரணைக்கு வந்தால் காண்பிக்க தயாராக இருப்போம் என்று போஸ் பாபு கிண்டலடித்தார்.

 ஆக பணம் தயார். சிலைகள் வாங்க யார் செல்வது? நிர்மல், அசோக், அமிதவ், குனின் குழு நாங்கள் போகிறோம் என்று புறப்பட்டார்கள். குமர்துளி என்றொரு பகுதி வடக்கு கல்கத்தாவில் இருந்தது. அங்கேதான் துர்காதேவி சிலைகளை செய்யும் பிரசித்தி பெற்ற மண்பாண்டக் கலைஞர்கள் இருந்தார்கள். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நால்வரும் புறப்பட்டார்கள். போனவர்கள் போனவர்களே இரவு வரை அவர்கள் திரும்பவில்லை. இங்கே பந்தலில் உள்ளவர்களுக்கு பதட்டம். என்னாயிருக்குமோ? மோட்டார் சைக்கிளில் போனார்களே, பாதுகாப்பாக போயிருப்பார்களா என்று கவலைப்பட்டார்கள். யாராவது குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் விபத்து நிகழ்ந்திருக்குமோ என்ற சிந்தனைதானே முதலில் வருகிறது!

 இரவு பத்து மணிக்கு அவர்கள் சிலைகளோடு வந்து சேர்ந்தார்கள்.கடைசி நிமிடம் என்பதால் மிகவும் அலைய வேண்டியுருந்தது.  துர்கா தேவி, சிவன், லட்சுமி, சரஸ்வதி, வினாயகர் சிலைகள் எல்லாம் வாங்கி ஒரு வண்டியில் ஏற்றி கொண்டு வந்தார்கள். கார்த்திகேயன் சிலை ம்ட்டும் கிடைக்காததால் இன்னொரு சரஸ்வதி சிலை வாங்கி அதையே கொஞ்சம் மாற்றி கொண்டு வருவதற்கு கால தாமதம் ஆனது என்றார்கள். சிலைகள் வந்ததை விட அவர்கள் பாதுகாப்பாக திரும்பி வந்ததே அந்த நிமிடத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது.

 சிலைகள் வந்தாகி விட்டது. ஒரு சின்ன பந்தல் அமைத்து இலாகோ கட்டிட வாசலில் நிறுவியாகி விட்டது. அடுத்து இன்னொரு கேள்வி வந்தது. யார் பூஜை செய்வது? எல்லோரும் முழித்தார்கள். பக்கத்தில் இருந்த பழக்கடை வியாபாரி நான் செய்கிறேன் என்று முன் வந்தார். பத்து நாட்களும் அமோகமாக கழிந்தது. வழக்கத்தை விட அதிகமானவர்கள் முற்றுகையில் கலந்து கொண்டார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல பல ஊழியர்கள் முற்றுகையிலும் பங்கேற்றார். சங்கம் அமைத்த துர்கா தேவியையும் வழிபட்டு சென்றார்கள். ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கை “கம்ப்யூட்டர் துர்கா” என்று தலைப்பிட்டு கட்டுரையே வெளியிட்டது.