Thursday, December 30, 2021

ஒரு செங்கொடிக்குப் பதிலாக

 


மேலே பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் வயல் வெளி வெண்மணியில் உள்ளது. மிகச் சரியாக சொல்ல வேண்டுமென்றால் வெண்மணி ஊரின் நுழைவாயில் வளைவிலிருந்து தியாகிகள் நினைவிடம் செல்லும் வழியில் உள்ளது.

இப்போதே இவ்வளவு செழிப்பாக உக்ளதே, ஐம்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்! அப்போதெல்லாம் காவிரி நதி நீர் பிரச்சினை எல்லாம் வேறு கிடையாது.

அவ்வளவு செழிப்பாக உள்ள ஊரில் அரைப்படி நெல் கூலி உயர்வு தருவதில் எந்த பிரச்சினையும் இருந்திருக்காது.

ஆனாலும் மறுத்தார்கள்.

ஏன்?

அரைபடி நெல்  கூலி உயர்வு தருவது சிக்கலில்லை. அந்த உயர்வை செங்கொடி அமைப்பில் இணைந்து கேட்டதுதான் சிக்கல்.

செங்கொடியை அந்த கிராமத்தில் பறக்கவிட்டதுதான் ஜமீன்தார்கள் பார்வையில்  தவறு.

விவசாயிகள் சங்கத்தின் செங்கொடியை கீழிறக்கி, நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மஞ்சள் கொடியை பறக்க விட்டால் கோரிக்கையைக் காட்டிலும் கூடுதல் உயர்வு தருவதாக ஆசை காண்பிக்க செங்கொடியின் வீரப் புதல்வர்கள் அந்த முன்மொழிவை நிராகரித்தார்கள்.

எங்களை மனிதர்களாக மதித்தவர்கள் செங்கொடி இயக்கத்தைச் சார்ந்தவர்கள்தான். அதனால் செங்கொடி இயக்கத்தை விட்டு விலகுவதோ செங்கொடியை இறக்குவதோ நடக்காத கதை என்று உறுதிபட தெரிவித்தார்கள்.

அதனால்தான் கோபால கிருஷ்ண நாயுடுவும் இதர நிலக்கிழார்களும் வெறி கொண்டு தாக்கினர். 44 பேரை உயிரோடு கொளுத்தினார்கள்.

இன்று என்ன நிலை?

ஒரு செங்கொடியை கீழிறக்க நினைத்த இடத்திலே ஊரெங்கும் செங்கொடிகள்….

அந்த கண்கொள்ளா காட்சியை நீங்களும் கண்டு ரசியுங்கள்.









2 comments: