Sunday, December 12, 2021

வெற்றியோடு வீடு திரும்பினர் . . .

 




380 நாள் விவசாயிகள் போராட்டம் நேற்று வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்தது மட்டுமல்லாமல் மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் என்று ஒன்றிய அரசு எழுத்து பூர்வமான உத்தரவாதம் அளித்ததால் நேற்று போராட்டத்தை நிறைவு செய்து விவசாயிகள் வெற்றிக் களிப்போடு வீடு திரும்பினர்.

அவர்கள் வீடு திரும்பும் முன்னர் தாங்கள் இத்தனை நாள் தங்கியிருந்த இடத்தை முழுமையாக சுத்தம் செய்து முன்னிருந்த நிலைக்கே கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து இயக்கங்களுக்குமே ஒரு நல்ல முன்னுதாரணம்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் ஜனவரியில் டெல்லிக்குத் திரும்புவோம் என்று எச்சரித்துள்ளனர். அதற்கான  அவசியத்தை மோடி உருவாக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வாங்கிய பலத்த அடியை மறந்திருக்க மாட்டார் என்று நம்புவோம். 

உலகமெங்கும் உள்ள உழைக்கும் மக்களுக்கு போராடும் உற்சாகத்தை அளித்த விவசாயிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் முக்கியமாய் நம்பிக்கை அளித்தமைக்காக நன்றிகளும் . . . .

No comments:

Post a Comment