Friday, December 31, 2021

இருப்பினும் 2021 சிறப்பே !!!

 


 

கொரோனா இரண்டாம் அலையின் எண்ணற்ற துயரங்கள்,

மோடி அரசின் தொடர் தாக்குதல்,

தனியார்மயமாக்கல், பணமயமாக்கல் என தேசத்தின் சொத்துக்கள் விற்பனை,

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வில்லாமை,

எண்ணற்ற ஆளுமைகளின் மறைவு,

 என்று 2021 வருடம் பல துயரங்களையும் சவால்களையும் அளித்தாலும் கூட 2021 சிறப்பான ஆண்டுதான்.

 ஏன்?

 முறியடிக்க முடியாத மூர்க்கத்தனமான அரசு என்ற பிரமையை தகர்த்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வைத்த விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் வெற்றியடைந்த ஆண்டு.

 இடது முன்னணி ஆட்சி மீண்டும் கேரளாவில் வெற்றி பெற்ற ஆண்டு.

 அடிமைகளின் ஆட்சி அகன்று திமுக ஆட்சி தமிழகத்துக்கு வந்த ஆண்டு.

 சிலியிலும் ஹோண்டுராஸிலும் நார்வேயிலும் போர்ச்சுகலிலும் இடதுசாரி சிந்தனையோட்ட அரசுகள் ஆட்சிக்கு வந்த ஆண்டு. பொலிவியாவிலும் வெனிசுலாவிலும் அவர்கள் தங்களை தக்க வைத்துக் கொண்ட ஆண்டு.

 இவையெல்லாம் எதிர்காலம் மீது நம்பிக்கையை அளிக்கிறது. போராட்ட எழுச்சி அளிக்கிறது.

 நாட்டிற்கும் மக்களுக்கும் ஒற்றுமைக்கும் எதிரான அரசு வரும் ஆண்டில் மேலும் மேலும் பலவீனமாகும் வகையில் நம் இயக்கங்கள் அமையட்டும்.

 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1 comment:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete