Friday, December 31, 2021

படுகொலைகள் பழக்கமானதால்தானோ?

 


இம்மாத துவக்கத்தில் இந்திய ராணுவம் நாகாலாந்தில் 12 அப்பாவி மக்களை படு கொலை செய்து ராணுவ அதிகார சிறப்புச் சட்டத்தினால் நடவடிக்கை இல்லாமல் தப்பித்ததையும் நாம் மறந்திருக்க முடியாது.

AFSPA ரத்து செய்யப்பட வேண்டும் என்ற குரல் அங்கே ஒலித்தது. மாநில முதலமைச்சர் கூட வலியுறுத்தினார்.

ஆனால் அச்சட்டம் நாகாலாந்தில் மேலும் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று மாநில அரசே ஆணை பிறப்பித்துள்ளது.

இதை இரட்டை வேடம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?

போராடும் மக்களை ஒடுக்க ராணுவ சிறப்புச்சட்டம் இருப்பது நல்லது என்று மாநில அரசு முடிவெடுத்ததா?

அல்லது

படுகொலைகள் அங்கே பழக்கமாகி விட்டதா?

No comments:

Post a Comment