Friday, December 24, 2021

பகத்சிங்கின் கடைசி ரொட்டி

 


உத்தர்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு தீண்டாமைக் கொடுமை பற்றி நேற்று எழுதியிருந்தேன்.

இப்போதே இந்த நிலைமை என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்!

தான் வாழ்ந்த காலத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக சமத்துவத்தைப் பேசியவன் புரட்சியாளன் பகத்சிங்.

பேசியது மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டியவன்.

ஆம்,

தன் இறுதி உணவை லாகூர் சிறையில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பேபியின் கையால் தயாரிக்கப்பட்ட ரொட்டிதான் வேண்டும் என்று கேட்டு உண்டவன் பகத்சிங்.

மோடி போன்ற நடிகன் அல்ல பகத்சிங், சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாத மாமனிதன்.

பிகு: பேபி என்பதற்குப் பதிலாக போகா என்ற தலித் கைதி ரொட்டி செய்து கொடுத்ததாகவும் இணையத்தில் ஒரு தகவல் உள்ளது. 

No comments:

Post a Comment