Monday, December 13, 2021

அண்ணாமலையையும் ஜெயிலுக்கு . . .


என் உறவினர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் பார்த்த நல்ல காமெடி. ஆட்டுக்காரரை எப்படியெல்லாம் பில்ட் அப் செய்யறாங்க பாருங்க! ஒரிஜினலா எழுதின மேதாவி யாரென்று தெரியலை. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி அண்ணாமலையை அசிங்கப்படுத்திக்கிட்டே இருக்காங்க. 



 DGP சைலந்திரபாபு சார்,

நான் கூட சமூகத்தின் மீதான அக்கறையில் தான் நீங்க அடிக்கடி வீடியோ போட்டு அறிவுரை வழங்கிட்டு இருக்கீங்கன்னு நினைச்சு பெருமைபட்டுட்டிருந்தேன்.

இன்னிக்கு அண்ணாமலை ஜி சொன்னதும் தான் தெரியுது அரசில் வேலை செய்ய ஒண்ணுமில்லாமல் தான் இப்படி சைக்கிள் எடுத்து சுத்திட்டிருக்கீங்களா?

😂😂😂
ஊருக்கே மாரல் க்ளாஸ் எடுத்துட்டு இருக்கீங்களே, ஒட்டு மொத்த டிபார்ட்மெண்டுக்கும் தலைமைப் பொறுப்பில் இருக்கீங்களே? நீங்க மாரல் படி தான் மாரிதாஸை கைது பண்ணியிருக்கீங்களா? கருத்து சுதந்திரம் என்ற ஜனநாயக அமைப்பைக் காக்கும் பொறுப்பு உங்களிடம் தானே இருக்கு?

ஊருக்கு ஊரு மேடை போட்டு தேசியத் தலைவர்களை கெட்ட வார்த்தையில் பேசிட்டிருக்கும் அரசியல் தலைவர்களை எல்லாம் உங்க டிபார்ட்மெண்ட் நோட்ஸும் வீடியோவும் எடுத்துட்டு தானே இருக்கு? அவர்கள் மீதெல்லாம் செடிஷன் கேஸ் போடத் துப்பில்லாத உங்க டிபார்ட்மெண்ட் இன்னிக்கு மாரிதாஸ் மேலே ஏன் செடிஷன் கேஸ் போட்டிருக்கு?

படிச்சவர் தானே நீங்க? மாரிதாஸ் போட்ட ட்வீட்ல செடிஷன் கேஸ் போடுற அளவுக்கு என்ன இருக்குனு உங்க டிப்பார்ட்மெண்ட் ஆட்களிடம் கேள்வி கேட்க மாட்டீங்களா? இல்லை திமுக மாவாட்டச் செயலாளர்களின் அடிமைப் பட்டியலில் நீங்களும் இருக்கீங்களா? என்ற தொணியில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேட்டிருப்பது உண்மையோ என்று யோசிக்க வைக்கிறது.

நீங்க உண்மையிலேயே நேர்மையான போலீஸ்காரராக இருந்தால், ஒண்ணு மாரிதாஸ் மேல போட்ட செடிஷன் கேஸை வாபஸ் வாங்குங்க. இல்லை அண்ணாமலை ஜி சொன்னது உண்மை தான். நான் திமுகவின் எடுபுடியாகத் தான் இருக்கிறேன் என்று வெளிப்படையாக அறிக்கை ஒன்றை விடுங்கள்.

இரண்டும் இல்லையா... என்னைக் குறித்து அவதூறாக பேசினார் என்று அண்ணாமலையை அரெஸ்ட் செய்து ஜெயிலில் போட்டுக் காட்டுங்கள்.
காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளை விட அதிகமாக அரசியல் பண்ணத் தொடங்கிட்டீங்களா?

மாரிதாஸ் உள்ளே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், நீங்கள் போட்டிருக்கும் காக்கிச் சட்டை உங்களுக்கு ஒண்ணரை டன் வெயிட்டாக கனத்து வலிக்கணும். இனி பொது மக்களுக்கு மாரல் க்ளாஸ் எடுக்கும் போது நெஞ்சுக்குள்ள செந்தட்டிச் செடி பட்ட மாதிரி உறுத்தனும்.

பார்க்கலாம் சார், நீங்க இந்திய அரசமைப்பின்பால் வைத்திருக்கும் அக்கறையையும், உங்கள் துறை மீது வைத்திருக்கும் மரியாதையையும்.
காத்திருக்கிறோம்.

நான் அங்கே போட்ட பின்னூட்டம்

நல்ல காமெடியா இருக்கு! ஒரிஜினலா எழுதினது யாரென்று தெரிந்தால் நன்றாக இருக்கும். மாரிதாஸ் போன்ற அராஜகப் பேர்வழியை, பொய்யனை, டுபாக்கூரை ஆதரித்து வீர வசனம் பேசிய ஆட்டுக்காரர் தானும் ஒரு டுபாக்கூர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment