Thursday, December 23, 2021

பாஜக மாநிலத்து தீண்டாமைக் கொடுமை

 


பாஜக ஆளும் உத்தர்கண்ட் மாநிலத்தில் சம்பவாத் என்ற மாவட்டத்தில் சுகிதாங் என்ற ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் ஒரு தலித் பெண்மணி சமையலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் சமைத்ததை சாப்பிட 65 குழந்தைகளில் 44 குழந்தைகள் மறுத்துள்ளன. வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்துள்ளனர். எங்கள் குழந்தைகள் அந்த பெண்மணி சமைக்கும் உணவை சாப்பிட மாட்டார்கள் என்று பெற்றோரும் தகராறு செய்துள்ளனர்.

மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது தெரியுமா?

பாஜக அரசு என்ன செய்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

அந்த பெண்மணியை பணி நீக்கம் செய்து விட்டது.

தமிழ்நாடாக இருந்தால்தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி களத்தில் இறங்கியிருக்கும்!

காவிகள் ராஜ்ஜியத்தில் ?????????

பிகு" இந்த சந்தர்ப்பத்தில் மாவீரன் பகத்சிங் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஏன்?

நாளை காலை காண்போம்.

No comments:

Post a Comment