Saturday, December 11, 2021

மத்யமர் - மிஸ் பண்றேன்

 


சங்கிகள் சூழ் மத்யமர் குழு முடக்கப்பட்டுள்ளது.

வருத்தமாகத்தான் இருக்கிறது.

சங்கிகள் அடிமுட்டாள்களாகவோ அல்லது அயோக்கியர்களாகத்தான் இருப்பார்கள் என்ற என் மதிப்பீட்டை ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டே இருந்த குழு அல்லவா அது!

முடக்கத்துக்கு காரணம் தெரியவில்லை.

மாரிதாஸ் கைது குறித்த பதிவுக்கான பின்னூட்டங்கள் காரணமென்று சொல்லப்படுகிறது. அந்த நாளில் ஒரு நீண்ட பயணத்தில் இருந்ததால் அந்த பதிவை பார்க்க முடியவில்லை. ஆனாலும் என்ன எழுதியிருப்பார்கள் என்று யூகிக்க முடியும்! போலி தேச பக்தர்கள் புலம்பி இருப்பார்கள். பிபின் ராவத்தை ஒரு தேவ தூதன் அளவிற்கு உயர்த்தியவர்கள் அல்லவா! 

மத்யமர்தான் என் வாழ்க்கை என்று புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த சில வயதான பெண்மணிகள்தான் மனதளவில் பாதிக்கப் பட்டிருப்பார்கள்.

மத வெறி, ஜாதி மேலாதிக்க சிந்தனை கொண்டு நச்சுக் கருத்துக்களை பரப்பியவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு குழு முடக்கப்பட்டது நல்லதுதான். 

சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது பொறுப்போடு செயல்பட்டால் சரி.

என்ன எழுதுவதற்கான கன்டெண்ட் சில சமயங்களில் மத்யமர் குழு மூலமே கிடைக்கும். அதை இழப்பது வருத்தமே!

No comments:

Post a Comment