Monday, December 20, 2021

நிஜமென்றால் நல்லதுதான்

 


தேசிய குற்ற ஆவண ஆணையம் 2020 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 2019 ல் பதிவான குற்றங்களின்  எண்ணிக்கை  51,56,158 என்றால் 28 % உயர்வோடு  66,01,285 குற்றங்கள் பதிவாகி உள்ளதாய் இவ்வறிக்கை சொல்கிறது.

 அதே நேரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019 ல் 4,06,326 ஆக இருந்தது 8.3 % குறைந்து 3,71,503 ஆக உள்ளதென்றும் 

 குழந்தைளுக்கு எதிரான குற்றங்கள் 2019 ல் 1,48,090 ஆக இருந்தது 13.2 % குறைந்து  1,28,531  ஆக உள்ளதென்றும் சொல்கிறது   இந்த புள்ளி விபரம் .

 பாலியல் வன் கொடுமை வழக்குகளில் 31 % வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைக்கிறது என்ற நிலை நீடிப்பது நல்லதல்ல. காவல்துறை வழக்குகளை அலட்சியமாக கையாள்கிறது என்பதன் அடையாளம் இது.

 பிகு : இந்த அறிக்கையை மேலோட்டமாக பார்த்த போதே மோடி வகையறாக்களின் ஒரு டூபாக்கூர் அம்பலமானது. அது என்ன?

 நாளை மாலை வரை காத்திருங்கள்

 

No comments:

Post a Comment