Monday, December 6, 2021

நாகாலாந்து கொலைகள் - சில கேள்விகள்

 


நேற்று நாகாலாந்தில் ராணுவம் 12 பொது மக்களை சுட்டுக் கொன்றுள்ளது. அவர்கள் தீவிரவாதிகள் என்று நினைத்ததால் கொன்று விட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளது ராணுவம்.

அதெப்படி நிலக்கரி சுரங்க ஊழியர்கள் அணியும் உடை போலவே, அவர்களை அழைத்துச் செல்லும் வாகனம் போலவே தீவிரவாதிகள் இருப்பார்கள் என்று உளவு சொன்னது யார்?

AFSPA எனப்படும் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் இல்லையென்றால் இப்படி பொறுப்பில்லாமல் செயல்பட முடியுமா?

அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதாவது புரிகிறதா?

நாகாலாந்தில் எல்லா குழுக்களுடனும் விவாதித்து அமைதி உடன்பாடு எட்டப்பட்டதாகவும் (அந்த உடன்பாடு, ஒப்பந்தம் எல்லாம் இன்று வரை ரகசியமே) பீற்றிக் கொள்ளப்பட்டதே, பிறகு எப்படி அங்கே தீவிரவாதிகள் வந்தார்கள் என்று அந்த சாதனைக்காகவே தமிழ்நாடு ஆளுனராக்கப்பட்டார், அவர் இங்கே திராவிட இயக்கங்களை வீழ்த்தி விடுவார் என்று சொல்கிறார்களே, அவர் இதற்கு பதில் சொல்வாரா?

நாகாலாந்தில் நடந்தது போலத்தான் காஷ்மீரிலும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை  நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

நாகாலாந்து சம்பவத்திற்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளாரே, வட கிழக்கு மாநிலங்களில் எங்காவது தேர்தல் வருகிறதா? 

No comments:

Post a Comment