Thursday, December 16, 2021

சீமானே! கொலையில் என்னய்யா பெருமை?


 

ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொண்டவர்களையோ, அல்லது அப்படி ஒரு திருமணம் நடந்து விடக் கூடாது என்பதற்காகவோ செய்யப்படும் கொலைகளை ஒரு காலத்தில் "கௌரவக் கொலைகள்" என்று அழைத்து வந்தார்கள்.

பிற்போக்கு சிந்தனையோடு செய்யப்படும் கொலைகளில் என்ன எழவு கௌரவம் இருக்கிறது என்ற விவாதம் சில காலம் நடந்து அப்படிப்பட்ட கொலைகள்  "ஜாதி ஆணவக் கொலைகள்" என்றே இப்போது அழைக்கப்பட்டு வருகின்றது.

ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க, ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க தனிச்சட்டம் வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராடிக் கொண்டிருக்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி மூன்றாண்டுகள் முன்பு சேலம் தொடங்கி சென்னை ஒரு நடைப்பயணம் கூட நடத்தியது.

இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டின் பெரும் பொய்யர் சீமான், ஜாதி ஆணவக் கொலைகளுக்கு புதிய பெயர் சூட்டியுள்ளார்.

அவை  இனி  "குடிப் பெருமை கொலைகள்" ஆம்.

சீமானும் சங்கிகளும் அய்யாக்களும் ஒன்று என்று சொல்லிக் கொண்டிருப்பதை அவர் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

ஜாதி ஆணவத்தில் செய்யப்படும் கொலைகளுக்கு "குடிப் பெருமை" என்று பெயர் வைப்பதன் மூலம் அப்படிப்பட்ட கொலைகளுக்கு கௌரவம் தருகிறார் சீமான். நியாயப் படுத்துகிறார். குடிப்பெருமையை பாதுகாக்க தவறில்லை என்று சொல்கிறார்.

வார்த்தையில் என்ன இருக்கிறது என்ற கேள்வி சில சமயம் வரும்.

வார்த்தைகளில்தான் எல்லாம் இருக்கிறது, சீமான் போன்றோரின் பிற்போக்குத்தனமான அரசியல் உட்பட . . .




No comments:

Post a Comment