Tuesday, December 28, 2021

அன்னை தெரசா காவி அணிந்திருந்தால்???

 


அன்னை தெரசாவின் “மிஷன் ஆஃப் சேரிட்டிஸ்” அமைப்பு வெளி நாட்டிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான அனுமதியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் புதுப்பிக்க மறுத்துள்ளது.

இந்தியா முழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆதரவற்றோருக்காக, தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அன்னை தெரசா வழியில் சேவை செய்து கொண்டிருக்கும் அமைப்பு “மிஷன் ஆப் சேரிட்டிஸ்”. அல்பேனிய நாட்டில் பிறந்து இந்தியாவில் சேவை செய்தவர் அவர். இந்தியாவில் மட்டுமல்லாமல் ஏராளமான வெளி நாடுகளிலும் செயல்படும் அமைப்பு அது.

பஞ்சாபில் சமீபத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களுக்குக் காரணமான நவ்ஜோத் சிங் சித்து எரிச்சலூட்டும் ஒரு நபர். ஆனால் அவருடைய பதிவு ஒன்று முக்கியமானது. அதனை பகிர்ந்து கொள்கிறேன்.

அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் சித்து பகிர்ந்துக்கொண்டது

1991-92 ம் வருடங்களில்ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவது வழக்கம். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின்போது அப்படி எனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டுஅன்னை தெரசாவைக் கட்டாயம் சந்திக்கவேண்டும்.. அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தேயாகவேண்டும்” என்று எனக்குள் ஓர் உந்துதல் ஏற்பட்டுஅவ்வாறே அவரது ஆசிரமத்துக்குச் சென்றேன். “Sisters of Charity” என்ற அந்த அலுவலகம் மிகச்சிறியதாய் இருந்தது. அங்கே இருந்த கன்னியாஸ்திரிகளிடம் ‘Where is Mother?’ என்று கேட்டேன். அதற்கு அங்கே இருந்த ஒரு கன்னியாஸ்திரி‘Mother is at the ‘Home for the dying’ என்றார். எனக்கு ‘Home for the dying’ என்று அவர் கூறியதன் பொருள் விளங்கவில்லை. அவர்கள் என்னை அந்த அலுவலகத்தின் பின்புறம் இருந்த ஒரு கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அந்தக் கட்டிடத்தினுள் தங்களது வாழ்வின் கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கும்மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

நான் உள்ளே நுழைந்தபோது அந்த கட்டிடத்தினுள்ளிருந்து ஒரு சகிக்க இயலாத நாற்றம் வந்துகொண்டிருந்தது. அழுகிக்கொண்டிருக்கும் மாமிசத்திலிருந்து வருவதுபோன்றதான அந்த நாற்றத்தின் நெடி குமட்டலை வரவைத்தது. அதைச் சகித்துக்கொண்டு அந்த சிறிய சந்தின் வழியாக நான் நடந்து சென்று ஒரு அறையை அடைந்தேன்.

அங்கேதான் முதன்முதலாக அன்னைத் தெரசாவைக் கண்டேன். தன் மரணப்படுக்கையிலிருந்த நீண்ட தலைமுடியைக் கொண்ட ஒரு மனிதன் அங்கே படுக்கவைக்கப்பட்டிருந்தான். அவனது உடலில் ஆடை எதுவும் காணப்படவில்லை. ஒரு துணி மட்டும் அவனது இடுப்பின் கீழே போர்த்தப்பட்டிருந்தது. அவன் உடல்முழுவதும் அழுகிபுண்களில் இருந்து சீழ் வடிந்துகொண்டிருந்தது. அன்னைமிகுந்த அன்புடன் அந்தப் புண்களில் வழிந்துகொண்டிருந்த சீழை ஒரு துணியினால் துடைத்துக்கொண்டிருந்தார். அவன் மிகுந்த வேதனையில் துடித்துக்கொண்டிருந்தான். அவன் உடலிலிருந்து வந்த நாற்றம் என் குடலைப்புரட்டியது.

ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. அந்தக் கட்டிடத்தினுள் இருந்து நான் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தேன் NavjotSingh Sidhu .. International Cricketer அங்கிருந்த சாக்கடையில் பெரும் குமட்டலுடன் வாந்தியெடுத்தான்.

பத்து நிமிடங்கள் கழித்து அன்னை தெரசா என்னிடம் வந்தார். புன்னகையுடன், ‘Yes My Son’ என்றார்‘Mother I wanted to meet you’ என்றேன். ‘Come my son! Follow me!’ என்றவர் நடக்கத் துவங்கினார். அலுவலகம் வந்தோம். நான் மனம் நிறைய அகங்காரத்துடன் என் பாக்கெட்டிலிருந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்தேன். அங்கிருந்த மேஜையின் மேல் வைத்தேன். அவரை வணங்கி, ‘Mother.. You are an Instrument of Good... I have come here to assist you. I would be really obliged if you accept this’ என்றேன். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறு‘Son.. I don’t need your money. I need your time. Can you spend time with these people? Can you give me some days where you can nurse them?’ என்றார். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

இவ்வுலகில் இப்படி உள்ளம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்களாநான் கொடுக்கும் பணத்தை மறுத்துஎன்னை வந்து இந்த நோயாளிகளுடன் நேரம் செலவிடச் சொல்கிறாரே?’ என்று உறைந்துபோனேன்.

அந்த நாற்றத்தினுள் இரண்டு நிமிடங்கள் என்னால் நிற்கக் கூட இயலவில்லை. நான் எங்கிருந்து அவர்களுக்கு சேவை செய்வதுThat was a life changing story for me.

பணம் கொடுத்து யாருக்கும் உதவி செய்துவிடலாம்’ என்ற என் எண்ணம் அன்று சுக்குநூறாகிப்போனது. பணத்தை விட அன்பும்நாம் பிறர்க்கு செய்யும் சேவையும் மிக மிக உயர்ந்தவை’ என்று அன்னை தெரசா அன்று எனக்கு உணர்த்தினார்.

நவ்ஜோத்சிங் சித்து.

வேலூரில் கூட மிஷன் ஆப் சேரிட்டிஸ் நடத்தும் ஒரு இல்லம் உள்ளது. சர்வ தேச மகளிர் தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது இல்லத்திற்கு பொருளுதவி செய்வது எங்கள் சங்கத்தின் பாரம்பரியம். அப்படி ஒரு ஆண்டு வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்குச் சென்றோம்.. வயது முதிர்ந்த, குடும்பத்தால் கைவிடப்பட்ட மன நலம் பாதிக்கப்பட்ட, பெண்களுக்கான இல்லம் அது. சுமார் நூறு பேருக்கு குறையாமல் அங்கே இருந்தார்கள். ஒரு புறம் மனம் கனத்துப் போனாலும் அந்த சூழலில் இருந்து எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவாக வெளி வர வேண்டும் என்றுதான் தோன்றியது.

சாதாரண தொண்டு அமைப்புக்களால் செய்ய இயலாதவற்றைத்தான் அவர்கள் செய்து வருகிறார்கள்.

அனுமதி ரத்துக்கான காரணம் என்ன?

சில தவறுகள் நடக்கிறது என்று உள்துறை அமைச்சகம் பொத்தாம் பொதுவாக சொல்கிறதே தவிர, விபரம் எதையும் பொது வெளியிலும் கூறவில்லை. அந்த அமைப்பிடமும் தெரிவிக்கவில்லை.

மீண்டும் மீண்டும் முன் வைக்கப்படுகிற புளித்துப் போன வாதமான “மத மாற்றம் செய்கிறார்கள்” என்ற ப்ழைய கட்டுக்கதையை சிலர் தூசி தட்டி பேசத் தொடங்கியுள்ளனர். ஸ்டெய்ன்ஸ் பாதிரியாரையும் அவரது இரு மகன்களையும்  உயிரோடு கொளுத்தியதை நியாயப்படுத்தவும் இதே கட்டுக்கதையைத்தான் அளந்து விட்டார்கள். அந்த கொலைக்கு திட்டமிட்டுக் கொடுத்த முதல் குற்றவாளி இப்போது மோடியின் மந்திரி.

மற்றவர்கள் ஆசை காண்பித்தால் மாறுகிறது போலத்தான் தங்கள் மதம் பலவீனமாக இருக்கிறதா என்ற கேள்வியை சங்கிகள் எப்போதாவது தங்கள் மனதிடமாவது கேட்டிருப்பார்களா?  சமத்துவத்தை எல்லா அம்சங்களிலும் கொண்டு வர சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருப்பார்களா?

சரி, அதெல்லாம் இருக்கட்டும்.

அன்னை தெரசாவின் அமைப்பு செய்து வருவது போன்ற பணி எதையாவது சங்கிகளின் அமைப்பு எப்போதாவது செய்திருக்கிறதா?

இந்த கேள்வியை கேட்பதில் ஒரு காரணம் உள்ளது.

இந்தியாவிலேயே அதிகமாக வெளி நாட்டு நிதி பெறுவது  யார் தெரியுமா?

அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான்.

அது பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத வேண்டும். முன்னோட்டமாக ஒரே ஒரு தகவல்

கோரோனா நிவாரண உதவிக்காக ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு அங்கமான சேவா பாரதி பெற்ற வெளி நாட்டு நிதி 22 மில்லியன் டாலர், இன்றைய ரூபாய் மதிப்பில் 164 கோடி ரூபாய். இந்த 164 கோடி ரூபாய் எதற்காக, எப்படி, எங்கே செலவிடப்பட்டது என்று கணக்கு கேட்குமா உள்துறை அமைச்சகம்? ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் என்ன என்பதை அறியாதவர்களா நாம்!

இன்றைய ஆட்சியாளர்களின் உள்ளத்தில் ஊறிப் போன மத வெறி தவிர வேறேதும்  காரணமில்லை. அவர்களின் சேவையை முடக்குவதில் ஒரு அற்ப சந்தோஷம்.

குழந்தைகளை காக்க கடுமையாக போராடிய டாக்டர் கபீல் கானை பணி நீக்கம் செய்த ஆள்கள்தானே இவர்கள்!

அன்னை தெரசா காவியுடை அணிந்தவராக இருந்திருந்தாலோ,  கோவை காருண்யா ஆட்கள் போல இவர்களுக்கு தலையாட்டுபவராக இருந்தால் அனுமதி தொடர்ந்திருக்கும், ஏன் அரசே அதிகமான  நிதி  கூட சேகரித்துக்  கொடுத்திருக்கும்.

பிகு: மேலே உள்ளது அன்னை தெரசா அவர்களின் சமாதி. கொல்கத்தா சென்றிருந்த போது எடுத்த படம்.

2 comments:

  1. இந்து அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து பெறும் பணஉதவிகள் சம்பந்தப்பட்ட விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. தானும் செய்யாமல் செய்கிறவனையும் செய்யவிடாமல் மீசையை முறுக்குவது ஒரு மன நோய். சீப்பை ஒளித்து கல்யாணத்தை நிறுத்தத் தவிக்கும் முட்டாள் முயற்சி. சங் பரிவாரால்
    தேசத்தில் விதைக்கப்படும் மத துவேஷம்
    அன்னை குணமாக்கிய குஷ்ட்டத்தைக் காட்டிலும் அருவருப்பான குரூர ரோகம்.

    ReplyDelete