Wednesday, January 30, 2019

மொட்டைச் சாமியார் கைது செய்வாரா பூஜா சாமியாரை?




மகாத்மா காந்தியை கொன்ற வெறி பிடித்த கூட்டம் இன்று அவரை மீண்டும் ஒரு முறை கொன்றுள்ளது.

ஆமாம்.

கொல்வது போன்றதொரு காட்சியை நடத்தியுள்ளது.

இந்து மகாசபா என்றதொரு காவி அமைப்பு இன்று உ.பி மாநிலம் அலிகாரில் நடத்தியுள்ள நிகழ்ச்சியில்

காந்தியின் படம் உள்ள கொடும்பாவியில் இந்து மகா சபாவின் பொதுச்செயலாளரான பூஜா சகுன் பாண்டே எனும் பெண் சாமியார் பொம்மைத் துப்பாக்கியில் சுட ரத்தம் போன்றதொரு திரவம் வழிந்துள்ளது.

துப்பாக்கியால் காந்தியை சுட்ட வைபவம் முடிந்த பிறகு கொடும்பாவியைக் கொளுத்தியுள்ளார்கள். அப்போது மகாத்மா நாதுராம் கோட்சே அமர் ரஹே என்றும் மகாத்மா நாதுராம் கோட்சே ஜிந்தாபாத் என்று கூச்சலிட்டுள்ளார்கள். (அதை முழக்கம் என்று சொல்ல நான் தயாரில்லை) பின்பு கொலைகாரன் கோட்சேவின் சிலைக்கு மாலை போட்டுவிட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி உள்ளார்கள்.

இதை விட யாராலும் மகாத்மா காந்தியை இழிவு படுத்திட முடியாது.

காந்திக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையே இழிவு படுத்தியுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த இழிச்செயல் செய்த பெண் சாமியார் பூஜா சகுன் பாண்டேவை

உத்திர பிரதேச மாநில முதல்வரான மொட்டைச்சாமியார் யோகி ஆதித்யநாத்  கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பாரா?

அல்லது தன்னால் செய்ய முடியாததை செய்தாய் என்று பூஜா சாமியாரை பாராட்டி அவரும் இனிப்பு தின்பாரா?

இரண்டாவதற்கான வாய்ப்புதான் அதிகம்.

ஆம், மோடி, யோகி, பூஜா என அனைவருமே கோட்சேவின் வாரிசுகள்தானே!!!!

4 comments:

  1. அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அந்த பொம்பளை முதலில் எங்க குறி வைச்சுதுன்னு கவனிச்சீங்களா? அவளை முதலில் சுடனும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். சிந்தனை, செயல் அனைத்திலும் வக்கிரம் நிறைந்த கூட்டம்

      Delete
  2. They are still afraid of Gandhi and also Periyar.

    ReplyDelete
    Replies
    1. அந்த பயம் இருக்கட்டும்

      Delete