Thursday, January 31, 2019

புலிக்கூட்டம் பகை முடிக்கும் . . .


அவர்கள் இல்லையேல்
அரசு இயந்திரம் இயங்காது.

அவர்கள் இல்லையேல்
எதிர்காலத் தலைமுறையும் கிடையாது.

ஆனாலும் அவர்களை
ஆட்சியாளர்கள் மதிப்பதே இல்லை,
ஆட்சியாளர்களே மதிப்பில்லாத
சில்லறைகள் என்றாலும் . . .

வாழ்க்கையின் ஓரத்துக்குத்
தள்ளப்பட்டவர்கள்
வேறு வழியில்லாமல்தான்
வீதிக்கு வந்தார்கள்.

அடக்குமுறை, அவதூறு,
மிரட்டல் மொழிகள்
எத்தனை எத்தனை ஆயுதங்கள்!

எட்டப்பர்கள் வழக்கமான
அரசு கை ஆயுதங்களாய் . . .

ஆவேசமாய் எழுந்த அவர்கள்
தற்காலிகமாய் அடங்கியுள்ளார்கள்

பதுங்கியுள்ள புலிக்கூட்டம்
மீண்டும் சீறிப் பாயும்,
பகை முடிக்கும் . . .

வரலாறு மீண்டு எழும்
காலம் விரைவில் வரும் . . .


No comments:

Post a Comment