Wednesday, January 9, 2019

போராட வருந்தாதே! பெருமைப்படு


மேலே உள்ளது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தொழிற்சங்கம் என்ற பெயரில் செயல்படும் ஒரு அமைப்பின் சுற்றறிக்கை.

காலை முகநூலில் பார்த்த போதே மிகவும் எரிச்சலாக இருந்தது. முதலாளிக்கு வால் பிடித்து போராடக் கூடிய தொழிலாளர்களை காட்டிக் கொடுக்கும் அமைப்புதான் அது. அது எந்த நிறுவனத்தில் செயல்படும்  எந்த  அமைப்பு என்பது இங்கே முக்கியமில்லை. ஏனென்றால் எல்லா இடங்களிலும் இது போன்ற விசுவாச அமைப்புக்களும் தனி நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்கள் முதலாளிகளுக்கு என்னத்தான் விசுவாசமாக இருந்தாலும் முதலாளிகள் தங்கள் குணாம்சத்தை காண்பித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதனால்தான் இவர்கள் கூட வேறு வழியில்லாமல் போராட்டப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

அப்படி போராடுகிற போது எதற்கய்யா வருத்தம்?

தாங்கள் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும் முதலாளிகள் அதை பிரதிபலிக்கவில்லையே என்றா?

இத்தனை நாள் யாருக்கு சாதகமாக இருந்து சக தொழிலாளிகளை காட்டிக் கொடுத்தோமோ, அவர்களுக்கு எதிராகவே போராடப் போகிறோமே என்ற வருத்தமா?

இப்படி ஒரு போராட்டம் நடத்துவதால் நம் மீது முதலாளிக்கு கோபம் வருமே என்ற அச்சமா?

எது எப்படியானாலும் போராடுவதற்கு வருத்தப்படாதீர்கள். 

போராடுவதற்காக பெருமைப் படுங்கள்.

அதுதான் நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு பெருமை. 


4 comments:

  1. என்ன தோழரே

    மத்தியில் 10% ஒதுக்கீடு கொண்டு வந்து விட் டார்கள்
    பாராளுமன்றத்தில் அக்கா கனிமொழி போராடிகிட்டு இருக்கின்றார்
    அடிமை தம்பித்துரை கூட வாயை திறந்து தூள் கிளப்பிகிட்டு இருக்கார்
    ஆனால் தாங்கள் இன்னும் ஒரு பதிவு கூட போடாம கமுக்கமாக இருக்கின்ரீர்கள்

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக நேரமில்லை.இதிலே கமுக்கமாக இருக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது? இன்று இரவு எதிர்பார்க்கவும்

      Delete
  2. அவசரப்பட்டு ஓவராக பொங்கிடாதீங்க சார்

    பொங்க, போராட உடன்பிறப்புகள் நாங்கள் இருக்கின்றோம்

    நீங்க செய்யவேண்டியது
    அந்த கேவலமான 10% சதவீத ஒதுக்கீட்டுக்கு உங்கள் கம்யூனிச , மார்கசிய போராளிகள் ஆதரவு அளித்ததுக்கு எப்படி முட்டு கொடுக்க வேண்டும் என்பது பற்றித்தான்

    அப்படியே ஆதரவு கொடுத்த பிரணாய் விஜயன் சாரை பாராட்டி ஒரு பதிவும் போட்டிடுங்க

    ReplyDelete
  3. உங்களை கிண்டல் செய்வதாக நினைக்க கூடாது

    எங்களுக்கு அந்த தகுதி உண்டு

    ஒட்டுமொத்த இந்தியாவும் அந்த கேவலத்து ஆதரவு கொடுக்க
    எதிர்த்த ஒரே ஒரு குழு திராவிடர் நாங்கள் மட்டுமே

    உண்மையான சமூக நீதி கட்டி காக்க போராடுவது திராவிடர் நாங்கள் மட்டுமே

    எங்களுக்கு உங்களை விமர்சிக்க சகல தகுதியும் உண்டு

    ReplyDelete