Friday, January 25, 2019

கொடியேற்றி மிட்டாய் சாப்பிடும் முன்


அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

இந்த நாளிலே சிலருக்கு தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கொடியேற்று விழாக்களில் கலந்து கொள்ளும் பலருக்கு ஆரஞ்சு மிட்டாயோ அல்லது எக்ளேய்ர்ஸ் சாக்லேட்டோ அல்லது லட்டோ சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும்.

பெரும்பாலானவர்கள் இந்த நாளை தொலைக்காட்சிகள் முன்பாக செலவழிப்பார்கள்.

கொடியேற்றும் முன்பாக,

மிட்டாய் சாப்பிடும் முன்பாக,

தொலைக்காட்சி முன்பு அமரும் முன்பாக, 

கொஞ்சம் இதைப் படித்து விடுங்கள்.



ஆம் இதுதான் நம் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு. இதனை ஏற்று அமலாக்கத் தொடங்கியதைத்தான் நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

அரசியல் சாசனம் அடிப்படையாக சொல்வது என்ன தெரியுமல்லவா?

இந்தியர்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மை உள்ள, சோஷலிஸ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக உருவாக்கவும்

இந்திய மக்கள் அனைவருக்கும்

அரசியல், பொருளாதார, சமூக நீதி கிடைக்கவும்

கருத்துரிமை, அதை வெளிப்படுத்தும் உரிமை, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுரிமை கிட்டவும்

சம வாய்ப்பும் சம மதிப்பும் கிடைக்கவும்

அனைத்து மக்கள் மத்தியிலும் சகோதரத்துவத்தை வளர்த்திடவும்

தனி நபரின் கண்ணியத்தையும்
தேசத்தின் ஒற்றுமையையும்  

பாதுகாப்போம்  என்று 

உளப்பூர்வமாக உறுதியேற்கிறோம். 

மேலே சொல்லப்பட்ட அரசியல் சாசன அடிப்படைகளை பாதுகாப்பவர்கள் யார்? அதற்கு எதிராக நிற்பவர்கள் யார்? 

கடந்த ஆகஸ்ட் பதினைந்து அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றியவரோ, அவரது கட்சியைச் சேர்ந்தவர்களோ நிச்சயம் கிடையாது. 

அரசியல் சாசனத்திற்கு எதிரான,
ஜனநாயகத்திற்கு எதிரான,
அரசியல், பொருளாதார, சமூக நீதிக்கு எதிரான,
மக்கள் ஒற்றுமை, மதச் சார்பின்மை, இறையாண்மைக்கு எதிரான 

மோடி வகையறாக்களை முறியடிப்பதே இந்தியாவிற்கு நல்லது. அந்த நல்லதை செய்ய தயாராவோம். அதுதான் இந்த குடியரசு தினத்தன்று நம் முன் உள்ள கடமை.

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் . . .




No comments:

Post a Comment