Thursday, January 17, 2019

பார்த்திபன் விடாத பழக்கம், பாஜகவும் கூட


டாட்டா பிர்லா என்ற படத்தில் ப்ரேக் பிடிக்காத காரை கதாநாயகி ஓட்ட, அதிலே பார்த்திபனும் கவுண்டமணியும் பயணிப்பார்கள்.

கார் ஒரு சவ ஊர்வலத்தின் மீது மோத அந்த சடலம் காருக்குள் வந்து விழும். அந்த சடலத்தின் மீது ஒட்டப்பட்டிருந்த நெற்றிக் காசை பார்த்திபன் எடுக்க "நீ இந்த பழக்கத்தை விடவே மாட்டியாப்பா"  என்று கவுண்டமணி கேட்பார். 

துபாயில் ராகுல் காந்தியை ஒரு சிறுமி கேள்வி கேட்டு நடுங்க வைத்ததாகவும் பதில் சொல்ல முடியாத நிலையில் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாகவும் ஒரு டுபாக்கூர் கதையை காவிகள் கட்டவிழ்த்து விட்டு அந்த பொய் அம்பலமாகி அசிங்கப் பட்டு நின்றதைப் பார்க்கையில் எனக்கு அந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. 

"ஏண்டா, இந்த மோசடி செய்யறதை நிறுத்தவே மாட்டீங்களாடா?" 

என்ற கேள்வியும் கூட எழுந்தது.

மோடி வகையறாக்கள் அள்ளி விடும் கற்பனைக் கதைகளை இன்னும் நம்பி பரப்பி வருகின்றவர்கள் மீது அனுதாபமும் கூட. 


No comments:

Post a Comment