Saturday, January 26, 2019

மாலை மலரும் ஏமாந்து போச்சே!!!!




வதந்திகளை விரும்பிப் பரப்பும் வாட்ஸப்பில்தான் கீழே உள்ள இந்த செய்தியை சில மாதங்கள் முன்பாக பார்த்தேன்.



அப்போது இதை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை.

பிறகு இதே செய்தி எழுத்தாளர் சுஜாதா எழுதியதாக கொஞ்சம் வேகமாகவே வலம் வந்தது. பத்திரிக்கைகளில் கதைகளும் கட்டுரைகளிலும் எழுதிய ஸ்ரீரங்கத்துக்காரர் ஆன சுஜாதா, படித்து முடித்ததும்  அரசு வேலைக்குப் போய் விட்டார் என்பதும் அவர் தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எல்லாம் வேலை பார்க்கவில்லை என்பதும் தெரியாமல் ஃபார்வர்ட் செய்து கொண்டிருந்தது தமிழ்ச்சமூகம்.

இப்போது பார்த்தால் சுஜாதா சொன்னதாகவே மாலை மலர் பத்திரிக்கை பிரசுரித்துள்ளது. 

ஒரு பத்திரிக்கை இப்படி வாட்ஸப் செய்திகளை நம்பி பிரசுரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இதை ஒரிஜினலாக எழுதியவர் யாரோ? 

அவர் எழுதியதை சுஜாதா எழுதியதாக அவருக்கும் யாராவது ஃபார்வர்ட் செய்திருப்பார்கள் அல்லவா!

2 comments:

  1. அப்துல் கலாம் சொன்னார், விவேகானந்தர் சொன்னார் என்று பரப்படும் செய்திகளும் இது போலத்தான்

    ReplyDelete
  2. yes you are right. SuJatha Rangarajan worked in Bangalaore BEL.He is the crew member of EVM.After his retirement period only He came to chennai and settled.

    ReplyDelete