Wednesday, January 2, 2019

அவன் காமாச்சார்யா . . .


மொட்டைச் சாமியாரின் ஆளுகையில் உள்ள உத்திரப் பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த சம்பவம் இது.

அயோத்தியில் உள்ள ஒரு கோயிலின் தலைமைப் பூசாரி, கோயிலுக்குள் நிகழ்த்திய பாலியல் வன் கொடுமைச் சம்பவம் இது.

அது எந்த கோயில் என்ற விபரத்தை உபி காவல்துறையும் சொல்லவில்லை. ஊடகங்களும் வெளியிடவில்லை.

அந்த கோயிலின் தலைமைப் பூசாரியின் பெயர் கிருஷ்ண காந்தாச்சார்யா. வாரணாசியிலிருந்து வந்த ஒரு பெண், ஆன்மீகப் பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்க,  கோயிலிலேயே தங்கச் சொல்லி இருக்கிறான்.

அந்தப் பெண்ணை வெளியே செல்ல விடாமல் பூட்டி வைத்து பல முறை பாலியல் வன் கொடுமை நிகழ்த்தியுள்ளான். கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்று அந்தப் பெண்ணை பாதுகாக்க எந்த குணசேகரனும் வராதது அப்பெண்ணின் துரதிர்ஷ்டம்.

கிடைத்த ஒரு  வாய்ப்பில் அப்பெண் தப்பித்து காவல்துறையில் புகார் கொடுக்க, அந்த தலைமைப் பூசாரி காந்தாச்சார்யா கைது செய்யப்பட்டுள்ளான்.

மோடியின் தொகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு இறுதியில் நியாயம் கிடைக்குமா 

அல்லது மொட்டைச் சாமியார் தன் சாமியார் இனத்தைச் சேர்ந்த அயோக்கியனை தப்பிக்க விடுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

No comments:

Post a Comment