Sunday, January 27, 2019

தேவையில்லை. திரும்பிப் போ. . .



உலக மகா பொய்யர்  இன்று மதுரை வருகிறார். 

நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் தயாரிப்பதற்கான பணிகள் கூட தொடங்கவில்லை. அப்படி இருக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவது என்பது அவரின் வழக்கமான "ஜூம்லா" வேலை என்பதைத் தவிர வேறெதுமில்லை.

"கஜா" புயல் காலத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளையோ மக்களையோ பார்க்க வர முடியாத அளவிற்கு பிரியங்கா சோப்ரா திருமணத்திலும் அம்பானி குடும்பத்து திருமணத்திலும் உல்லாசத்தில் மூழ்கிப் போன மனிதனுக்கு இப்போது மட்டும் தமிழகத்தில் என்ன வேலை?

தமிழகம் உட்பட இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒரு மோசடிப் பேர்வழி தமிழகம் வர வேண்டிய அவசியம் இல்லை.

மக்கள் விரோதியை தமிழகம் வரவேற்காது.

எனவே உரக்கச் சொல்வோம் . . .

#GoBackModi

3 comments: