Wednesday, October 10, 2018

பிப்ளப்பிற்கு தேசர்கதா பெப்பே



மகிழ்ச்சியான செய்தி இது ...

*“தேஷர் கதா” நாளேடு நாளை முதல் மீண்டும் வெளி வருகிறது!*
அகர்தலா- 10, அக்டோபர், 2018

திரிபுரா மாநில சி.பி.ஐ (எம்) கட்சியின் தேஷர் கதா, நாளேட்டினை தடை செய்து மாவட்ட மாஜிஸ்திரேட் (மேற்கு) சந்தீப் மஹதே சென்ற வாரம் பிறப்பித்திருந்த உத்தரவினை திரிபுரா உயர் நீதி மன்றம் இன்று ரத்து செய்தது.

தடையினை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த தலமை நீதிபதி அஜய் ரஸ்தோகி, மாவட்ட மாஜிஸ்திரேட்டின் தடை உத்தரவை ரத்து செய்தார். அது மட்டுமல்லாது, *தேஷார் கதா ஏற்கனவே எவ்வாறு வகைப்படுத்தப் பட்டிருந்ததோ அதன் படியும், அதே அந்தஸ்திலும் நாளை முதல் வெளியிடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்*.

இதனையடுத்து தேஷர் கதா நாளை முதல் வழக்கம் போல் வெளிவரும்.

1 comment: