Thursday, October 4, 2018

பீர் குடிக்கும் எலிகள் - போலீஸ் கதை

தீக்கதிரில் இன்று வெளியான ஒரு சுவாரஸ்யமான செய்தி. 

காவல்துறையின் கற்பனாசக்திக்கு எல்லையே கிடையாது.





11 ஆயிரம் பாட்டில் பீரைக் குடித்த எலிகள்...
பழிபோடும் பீகார் காவல்துறை

பாட்னா, அக். 3 -

பீகார் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 11 ஆயிரம் பாட்டில் பீரையும் எலிகள் குடித்து விட்டதாக, அம்மாநில காவல் துறையினர் கூறியுள்ளனர்.பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தனது மாநிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு மதுவிலக்கைக் கொண்டு வந்தார். அதனைக் கடுமையாகவும் அமல்படுத்தினார். ஊரில் யாராவது ஒருவர் மது குடித்தால் கூட, அந்த ஊருக்கே அபராதம் விதித்தும் மிரட்டல் விடுத்தார்.

சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ய முயன்றவர்களிடம் இருந்து மது, பீர் பாட்டில்கள், கேன்கள் போன்றவற்றை காவல்துறையினர் தொடர்ந்து பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில், பிடிபட்ட மதுபாட்டில்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அழிக்க முயன்றபோது, கிட்டங்கியில் வைக்கப்பட்ட மதுபாட்டில் மற்றும் பீர் பாட்டில்கள் காலியாகக் கிடந்தது தெரியவந்தது. இது பரபரப்பையும் ஏற்படுத்தியது. மதுவும், பீரும் எங்கே போனது? என்று கேள்விகள் எழுந்தன.அதற்கு தற்போது கைமூர் மாவட்ட நகர நிர்வாக அதிகாரி கல்பனா குமார் பதிலளித்துள்ளார். 

அதில், “பாட்டில்கள் மற்றும் கேன்களில் இருந்த ‘பீர்’ அனைத்தும் மாயமாக இருக்கிறது” என்றும், “அனைத்து பீர் கேன்களிலும், சிறிய துளைபோடப்பட்டு இருப்பதால், இந்த பீர் அனைத்தையும் எலிகள் குடித்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்றும் வித்தியாசமான பதிலை கூறியுள்ளார். 

கிட்டங்கியில், 11 ஆயிரம் பீர் கேன்களில் மொத்தம் 16 லட்சம் ஐஎம்எல் மதுவும், 9 லட்சம் லிட்டர் உள்நாட்டு மதுவும் வைக்கப்பட்டு இருந்த நிலையில், அவை அனைத்தையுமே குடித்து விட்டதாக எலிகள் மீது பழி போட்டுள்ளார்.

3 comments:

  1. those could be two-legged rats (also known as corrupt secular politicians)

    ReplyDelete
    Replies
    1. பீட்டர் உடற தம்பி, பீகாரில பாஜக கூட்டணி ஆட்சிதான். ஆமாம் அந்த காலத்தில வாஜ்பாய் சீனாவில் குடித்து கும்மாளமிட்ட கதை தெரியுமா?

      Delete
  2. நம்பிக்கை ராஜ்October 5, 2018 at 12:27 PM

    1970 களில் 15 லட்சம் கிலோ சர்க்கரையை எறும்பு தின்று விட்டதாக கணக்கு காட்டியவர் தமிழக தலீவர்
    அவரிடம் பீகார் திருட்டு கொரங்குகள் பிச்சை வாங்கணும்

    ReplyDelete