Tuesday, October 30, 2018

காலி நாற்காலி புதுசா பொன்னார்?


நாகை மாவட்டம், வேதாரண்யம் பக்கத்தில் ஆதனூர் என்ற கிராமத்தில் ஒரு சுகாதார மையத்தை திறந்து வைக்கப் போன அமைச்சர் பொன்னார் மேடையேற மறுத்து விட்டாராம்.

காரணம்?

20 நர்ஸ், 10 டாக்டர், ஆறு விவசாயிகள், இவரோடு வந்த கட்சிக்காரர்கள் 15 பேரைத் தவிர வேறு ஆட்களே இல்லையாம். அந்த விவசாயிகளும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மனு கொடுக்க வந்தவர்கள்.

அதிகாரிகளிடம் அவர் சத்தம் போட, அவர்கள் வீடு வீடாக சென்று மக்களை அழைக்க ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு ஐம்பது பேர் தேற மொத்தமாக நூறு பேர் மத்தியில் வீர உரை ஆற்றியுள்ளார்.

ஐய்யா பொன்னார் அவர்களே,

இப்படி ஆள் பிடித்து ஆள் பிடித்து பேசும் பிழைப்பெல்லாம் உமக்கு தேவையா? 

காலி நாற்காலிகள் உமக்கு புதுசா என்ன? லட்சக்கணக்குல செலவு செய்யற உங்க கட்சி மாநாடுகளிலேயே காலி நாற்காலிங்களைப் பார்த்துதான் பேசறீங்க! 

இங்கேதான் 

20 நர்ஸ், 
10 டாக்டர்
15 கட்சிக்காரங்க

45 பேர் இருந்தாங்களே, இதுக்கு மேலயும் உங்க கூட்டத்துக்கு ஆள் வேணுமா என்ன!

ஆனாலும் அநியாய பேராசையா உமக்கு!


2 comments:

  1. This looks like Actor Singamuthu without his wig...!?
    Is this photo Singamuthu or Pon. Rathaakrishanan? Please calrify...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.
      பாவங்க பொன்னார். அழுதுருவாரு

      Delete