Saturday, October 20, 2018

பொய் சொல்ல கூசாதா காவிகளே?



காவிக்கயவர்கள் கூட்டத்தின் இரு முக்கியப் பிரமுகர்கள் கொஞ்சமும் வெட்கமோ கூச்சமோ இல்லாமல் அளந்து விட்ட பொய்கள் இங்கே.

முதலில் துக்ளக் எனும் பாடாவதி பத்திரிக்கையின் ஆசிரியரும் பினாமி முதலமைச்சர் என்ற நினைப்பில் இருப்பவருமான குருமூர்த்தியின் பதிவு இங்கே 



மேலே உள்ள படத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரியோடு இருப்பவர் சபரிமலைக்கு சென்ற பத்திரிக்கையாளர் அல்ல. குஜராத் படுகொலைகளை அம்பலப்படுத்தி இன்றும் மோடி மற்றும் அமித் ஷாவை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிற செயற்பாட்டாளர் டீஸ்டா சேதல்வாத். 

உங்க எதிரியைக் கூட அடையாளம் தெரியாம, நீங்க எல்லாம் என்ன பத்திரிக்கை நடத்தி கிழிக்கிறீங்க மிஸ்டர் குருமூர்த்தி?

அடுத்து  

சிப்பு சேகரால் ஊழல் பேர்வழி என்று அடையாளம் காட்டப்பட்டுள்ள  தொலைக்காட்சி ரௌடி கேடி.ராகவனின் பதிவு கீழே உள்ளது.



இப்படம் பற்றி பத்திரிக்கையாளர்  முரளிதரன் காசி விஸ்வநாதன் சொல்வதை படியுங்கள்

தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.கவின் சார்பில் கலந்துகொள்பவரும் வர்த்தக, பொருளாதார, அரசியல் அறிஞருமான கே.டி. ராகவன் தன் முகநூலில் இந்தப் படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அதாவது அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் ஆயுத புஜை கொண்டாடினாராம்... அதற்கு ஆதாரமாகப் படம் கிடைத்துவிட்டதாம்..

இந்தப் படம், 2015ஆம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படம். பயணத்தின்போது நாகப்பட்டினம் சென்றபோது, சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபோது இந்தப் படம் எடுக்கப்பட்டது.

இந்த விவரமெல்லாம்கூட தெரிய வேண்டாம்.. படத்தில் ஒரு மலர்வளையம் வைக்கப்பட்டிருக்கிறதே.. அதுகூடவா தெரியவில்லை.. இதை இத்தனை பேர் படம் எடுத்திருக்கிறார்களே.. ஏன் எந்தத் தொலைக்காட்சியிலும் நாளிதழிலும் இந்தப் படம் வரவில்லை என்றாவது யோசித்திருக்க வேண்டாமா?

ஆனால், இதையும் பல சங்கிகள் பகிர்ந்து, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது என்று மகிழ்ந்திருக்கிறார்கள். இப்படி ஆட்கள் இருக்கும்போது கே.டி. ராகவன் ஏன் யோசிக்கப்போகிறார்?

மோடியில் தொடங்கி கடைசி காவி வரை யாருமே பொய் சொல்ல கூச்சப்படுவதில்லை.

இவர்களை நம்புவதற்கு முட்டாள் கூட்டம் இருக்கும் வரை பொய்களை அள்ளி விட்டுக்கொண்டே இருப்பார்கள்தான் . . .

2 comments:

  1. வெட்கம் கெட்டவனுங்க

    ReplyDelete
  2. ஆர் எஸ் எஸ் அன்றும் இன்றும் அயோக்கியர்களின் கூடாரம். சூடு சொரணை அற்ற அயோக்கியர்கள். பொய்யிலே பிறந்து , பொய்யிலே வளர்கின்ற வன்முறை கூட்டம்.

    ReplyDelete