Monday, October 22, 2018

கமல் வசனமே காரணம் . . .


மன்னிப்பு – அவங்களுக்கு பிடிச்ச வார்த்தை



ஹைகோர்ட்டாவது !  . . . . . . . .வது என்று பேசியதற்கு எச்.ராசா இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

அது என் குரல் இல்லை, யாரோ எடிட் செய்து விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆமாம், அது ஒன்றும் அவர் குரல் இல்லை என்று பொன்னார் உள்ளிட்ட பிற காவிகளும் அதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கோர்ட் அனுப்பிய நோட்டீஸை பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பி இதுதான் வீரம் என்று வேறு முழங்கினார்கள்.

ஆனால்  “உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன். மன்னிச்சுக்கோங்க” என்று இப்போது   மன்னிப்பு கேட்டு விட்டார்.

இவர்கள் வெட்டி வீரம் பேசுவதும் கைது, சிறை என்றால் நடுநடுங்கி மன்னிப்பு கேட்பதும் புதிதா என்ன?

மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அடிபணிந்து நடப்பேன் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு அந்தமான் சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியே வந்து அதன் பிறகு கம்முனே இருந்தார், பெயரில் மட்டும் வீரத்தை ஏந்திய சவர்க்கர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்ட வீரர்களை காட்டிக் கொடுத்து பிற்காலத்தில் பிரதமராகவே ஜம்முனு இருந்தார் வாஜ்பாய்.

அவசரநிலைக்காலத்தில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு இந்திரா அம்மையாரிடம் சரணாகதி அடைந்தவர் காவி குருபீடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அன்றைய “சர்ங்க்சாலக்”  மதுகர் தத்தாத்ரேய தேவரஸ்.

“மன்னிப்பா? மானங்கெட்டவனே, எதற்கு கேட்க வேண்டும் மன்னிப்பு’ என்பது கட்டபொம்மன் திரைப்பட வசனம்.

“தமிழில எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு” என்பது ரமணா திரைப்பட வசனம்.

காவிகளுக்கு எல்லா மொழிகளிலும் பிடித்த வார்த்தை “மன்னிப்பு” என்பது நிஜ வாழ்வின் யதார்த்தம்.

இவர்கள் இப்படி மன்னிப்பு கேட்டு மானங்கெட்ட பிழைப்பு நடத்துவதற்கு கமலஹாசனின் விருமாண்டி பட வசனம்தான் காரணம்.

"மன்னிக்கறவன் மனுசன்"
"மன்னிப்பு கேக்கறவன் பெரிய மனுசன்"

என்ற வசனத்தின் அடிப்படையில் 

மன்னிப்பு கேட்டாலாவது பெரிய மனுசனாக முடியுமா என்று முயற்சிக்கிறார்கள், பாவம்!!!!

2 comments:

  1. தலைகீழா நின்னா கூட இவனுங்க என்னிக்கும் பெரிய மனுஷனாக முடியாது

    ReplyDelete
  2. சில்லறைகள்

    ReplyDelete