Saturday, October 27, 2018

குளிக்க முடியாவிட்டாலும் . . .

குமரி பயணத்தின் போது மாத்தூர் தொட்டிப் பாலத்தை பார்த்து முடித்ததும் வாகன ஓட்டுனர்

'இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரம்தான் திற்பரப்பு அருவி, போய் வரலமா சார்"

என்று கேட்க

அருவிகளின் காதலனான நான் எப்படி வேண்டாமென்று சொல்வேன்!

கார் வேகமாய் பயணித்தது.

பார்க்கிங்கில் காரை நிறுத்துகையிலேயே அருவி ஆர்ப்பரிக்கும் ஓசை கேட்டது.

காரை விட்டு இறங்கிய உடன் ஒரு பெரிய பேனர் கண்ணில் பட்டது.

அருவியின் வேகம் அதிகமாக இருப்பதால் குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் பரவாயில்லை

பார்வைக்கு அருமையான விருந்து . . .
சலசலவென்று வீசிய தென்றலும் 
குளிர்ந்தும் குளிராத சூழலும்

மனதுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

இன்னொரு முறை வந்து குளித்தால் போகிறது என்று
வேகமாக விழுந்து எழுந்து போன அருவியை
கேமராவில் சிறைப்படுத்திக் கொண்டு புறப்பட்டோம்.


















1 comment: