Wednesday, October 24, 2018

அப்போ கேரளாவின் இதர கோயில்கள்????

அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அது தொடர்பாக சங்கிகள் நடத்தும் அரசியல் கலவரங்களுக்கு மத்தியில் திருவாங்கூர் தேவஸம் போர்டின் தலைவராக இருந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் என்பவர் ஒரு அரிய கருத்தை உதிர்த்துள்ளார்.



பெண்களை அனுமதித்தால் சபரிமலை பாலியல் சுற்றுலாத் தளம் ஆகி விடும் என்பது அந்த கருத்து முத்து.

அப்படியென்றால் பெண்கள் அனுமதிக்கப்படுகிற கோயில்கள் உள்ள ஊர்கள் எல்லாமும் அப்படித்தான் செயல்படுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

மீண்டும் சொல்கிறேன்.

வழிபாட்டுத் தளங்களையும் கடவுள்களையும் பெண்களையும் இழிவுபடுத்துவது 

கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களே தவிர

இறை மறுப்பாளர்கள் அல்ல.

பக்தர்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். 

2 comments:

  1. What about the Satement of the Fake degree minster cum actress?

    ReplyDelete
    Replies
    1. அந்த ஸ்மிரிதி அம்மையார்தானே?
      நாளை தனி பதிவாகவே எழுதி விடலாம்

      Delete