Tuesday, October 9, 2018

கவர்னர் தாத்தா குதிருக்குள் இல்லையாம்




நக்கீரன் ஆசிரியர் திரு கோபால் அவர்கள் ஆளுனர் மாளிகையின் புகாரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. 

இதன் மூலம் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி மீதான பாலியல் சர்ச்சை விவகாரத்தில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பதையும் அந்த சர்ச்சையை மறைக்க மிரட்டல் ஆயுதத்தை பயன்படுத்தி உள்ளனர் என்பதையும் அவர்களே அம்பலப்படுத்திக் கொண்டு விட்டனர்.

ஆனால் திரு கோபாலை விடுவித்ததன் மூலம் நீதிமன்றம் புரோஹித்துக்கும் எடுபிடி அரசுக்கும் சரியான அடி கொடுத்துள்ளது.

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ள ஜென்மம் என்றால் புரோஹித் தாத்தா, தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு  மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு தமிழ்நாட்டை விட்டே ஒட வேண்டும்.

ஆனால் காவிக் கயவர்களுக்கு அதெல்லாம் கிடையாது என்ற உண்மையை நாம் மறக்க முடியாதல்லவா!



2 comments:

  1. கவர்னர் தாத்தா மட்டுமல்ல
    வைரமுத்து தாத்தா கூட அசிங்கப்பட்டு இருக்கார்

    ReplyDelete
  2. In cinema industry except one or two like Sivakumar are known for thier honesty. They dont chase women. But Vairamuthu even though he has grand sons, is known for his overtures towards young girls. Singer Chinmayi has exposed him now. Womens organisations should take up the case now.

    ReplyDelete